கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை விரைவில் தரமுயர்த்துவதற்கு  நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதமர் உறுதி

Published By: Vishnu

20 Jun, 2019 | 09:14 PM
image

(ஆர்.யசி)

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை விரைவில் தரமுயர்த்துவதற்கு  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம்  வாக்குறுதியளித்துள்ளார்.  

எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கையை விரைவில் பூர்த்தி செய்து கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையான அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று பாராளுமன்றத்தில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்திருந்து. இச்சந்திப்பில் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபயவர்த்தனவும் கலந்துகொண்டிருந்ததுடன், கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, கவீந்திரன் கோடீஸ்வரன், ஸ்ரீநேசன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது கல்முனை வடக்கு பிரதேச சபை பிரச்சினை குறித்தும் அதனை அடிப்படியாக வைத்து தற்போது முன்னெடுத்து வருகின்ற ஆர்பாட்டங்கள் உண்ணாவிரத போராட்டங்கள் குறித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொட்ர்பில் கடந்த ஏப்ரல் 5ஆம் திகதி பிரதமருடன் தாம் பேச்சுவார்த்தையும் , ஜுன் 30ஆம் திகதிக்குள் இதற்கு தீர்வை வழங்குவதாக உறுதியளித்திருந்தபோதும் ஏப்ரல் 21 தாக்குதல்களால் அதற்கான நடவடிக்கைகள் காலதாமதடைந்திருந்ததை பிரதமருக்கு நினைவுபடுத்தினர். 

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையாக தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகளை விரைவில் எடுப்பது என ஏப்ரல் மாத ஆரம்பத்திலேயே இணக்கம் காணப்பட்டது. இதற்கான எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்கும் நாம் ஏற்கனவே இணங்கியிருந்தோம் என்பதையும் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08