(இராஜதுரை ஹஷான்)
உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் தகுதி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவிற்கு கிடையாது. மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப நாட்டை ஆட்சி செய்தது போதும். இளம் தலைமுறையினருக்கும், அரசியல் புது முகங்களுக்கும் வாய்ப்பு வழங்கி விலகிக் கொள்வதே கௌரவமான செயற்பாடாகும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை காரியாலத்தில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் தகுதி கிடையாது. பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் இவர் அமெரிக்க குடியுரிமையினை இரத்து செய்து விட்டார் என்று குறிப்பிட்டுக் கொள்கின்றார்கள். ஆனால் இதுவரையில் இரட்டை குடியுரிமையினை இரத்து செய்தமைக்கான எவ்வித உரிய ஆவணங்களும் சமர்ப்பிக்கடவில்லை.
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற் ஆட்சிகாலத்தில் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன. 30 வருட கால சிவில் யுத்தமும் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது வரவேற்புக்குரியது. இக்காலக்கட்டத்தில் இவரது குடும்ப உறுப்பினர்கள அனைவரும் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளில் செல்வாக்கு செலுத்தினார்கள். 10வருட ஆட்சியில் பல விடயங்கள் நிறைவேற்றிக் கொண்டார்கள் என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM