கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயத்துமாறு கோரி கல்முனையில் இடம்பெற்றுவரும் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் காரைதீவில் உண்ணாவிரதம் ஆரம்பமாகியுள்ளது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான ஆ.பூபாலரெத்தினம், இ.மோகன், ச.ஜெயராணி, த.மோகன், எம்.காண்டிபன் ஆகியோருடன் முன்னாள் காரைதீவு பிரதேச சபை பிரதி தவிசாளரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு அமைப்பாளருமான பொறியலாளர் வி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் சில பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை மக்களுக்கான சேவைகளை சிறப்பாக வழங்கும் விதமாக சகல வசதிகளும் கொண்ட கல்முனை வடக்கு பிரதேச செயலகமாக தரமுயர்த்தி தரவேண்டும் என்ற கோஷத்துடன் கல்முனையில் பிரதான உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்று வரும் இந்நிலையில் அப்போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு காந்தி பூங்கா மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் அருகிலும் அடையாள உண்ணாவிரதம் இடம்பெற்றுவருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM