கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஒரு முன்னேற்றமாக 1000 தீபங்கள் ஏற்றப்பட்டு இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கல்முனையில் உள்ள இளைஞர் அமைப்புக்கள்,தமிழ் ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள், அரசியல் பிரமுகர்கள் , பொது அமைப்புகள் மற்றும் பிரதேச மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்துக்கு உரிய முறையில் காணி, நிதி அதிகாரங்களை பெற்று இயங்க நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் தங்களது உச்ச அதிகாரங்களைப் பயன்படுத்தி பெற்றுத்தர வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகின்றது.
அரச உயரதிகாரிகளின் வாக்குறுதிகளையும் நம்பாமல் கல்முனை மக்களின் நியாயமான நீண்டகால கோரிக்கையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறைவேற்ற வேண்டும் என போராட்டக்கார்கள் வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM