கைவிடப்பட்டது ரயில்வே ஊழியர்களின் பணிப் பகீஷ்கரிப்பு

Published By: Digital Desk 4

19 Jun, 2019 | 09:38 PM
image

இன்று நள்ளிரவிலிருந்து முன்னெடுக்கப்படவிருந்த ரயில்வே திணைக்கள ஊழியர்களின் பணிப் பகீஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாட்டை நீக்குதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவிலிருந்து ரயில்வே தொழிற்சங்கங்கள் ஆரம்பிக்கவிருந்த பணிப்பகீஷ்கரிப்பு வைவிடப்பட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. 

ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சில இரண்டு நாள் பணிப் பகீஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு ஏற்கனவே தீர்மானித்திருந்தன. இந்நிலையில் தொழிற்சங்கங்களின் கோரிக்கை தொடர்பில் நிதியமைச்சருடன் நாளை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் அசோக அபயசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, தமது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காவிடத்து மீண்டும் பணிப் பகீஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02