(நா.தனுஜா)
அரச நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட, பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படாத காணிகளை வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் துரித பாதுகாப்பு வேலைத்திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வனப்பிராந்தியங்கள் உள்ளடங்கலாக நாட்டிலுள்ள மொத்தக் காணியின் அளவு 29.7 சதவீதமாக உள்ள நிலையில், எதிர்வரும் 2030 ஆம் ஆண்டாகும் போது அதனை 32 சதவீதமாக விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.இதன்கீழ் மேலும் ஒரு இலட்சத்து 48 ஆயிரம் ஹெக்டேயர் காணியை வனநிலப்பகுதியாக விரிவுபடுத்துவதற்கு வனப்பாதுகாப்புத் திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.
இந்த இலக்கை எட்டுவதற்கு வனப்பாதுகாப்புத் திணைக்களத்திடம் உள்ள காணியின் அளவு மாத்திரம் போதுமானதல்ல என்பதால், ஏனைய அரச மற்றும் தனியார் காணிகளையும் இந்த வேலைத்திட்டத்திற்குப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணிகளில் பொருளாதார பயிர்ச்செய்கைக்கு அப்பால் 65 சதவீத வனப்பகுதியைப் கொண்டுள்ள காணிகள்,இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் காணிகளில் கலப்பு வனவளர்ப்பு வேலைத்திட்டத்தின் கீழ் அடையாளங்காணப்பட்ட காணிகள் என்பன வனப்பாதுகாப்புத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வனப்பாதுகாப்பை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்திற்கென மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்துறை அமைச்சினால் சுவீகரிப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM