பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துமாறு கோரி கல்முனையில் ஆர்ப்பாட்டம்

Published By: R. Kalaichelvan

19 Jun, 2019 | 12:37 PM
image

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துமாறு கோரி மட்டக்களப்பில் இன்று காலை கவன ஈர்ப்பு பேரணியும் போராட்டமும் நடைபெற்றது.

கல்முனையில் மதத்தலைவர்களினால் முன்னெடுக்கப்படும் உண்ணாவிரத போராட்டத்திற்கு இணைவாக இந்த போராட்டம் முற்போக்கு தமிழர்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த மூன்று தினங்களாக மட்டக்களப்பில் சத்தியாக்கிரக போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இன்று காலை இந்த கவன ஈர்ப்பு பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முற்போக்கு தமிழர்கள் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான எஸ்.வியாழேந்திரன் தலைமையில் காந்திபூங்காவில் பேரணி ஆரம்பமாகி மட்டக்களப்பு பஸ் நிலையம் வரையில் சென்று மீண்டும் காந்திபூங்காவினை வந்தடைந்தது.

அதனைத்தொடர்ந்து காந்திபூங்காவில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த நடவடிக்கையெடுக்குமாறு அரசாங்கத்தினை வலிறுத்தும் வகையிலான கோசங்களும் எழுப்பப்பட்டன.

இந்த போராட்டத்தில் முற்போக்கு தமிழர்கள் அமைப்பின் உறுப்பினர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டதுடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தவேண்டும் என்பதான பதாகைகளையும் போராட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46