கோத்தாவின் இருதய சிகிச்சை:6 வாரம் ஓய்வு தேவை

Published By: R. Kalaichelvan

19 Jun, 2019 | 10:08 PM
image

வீரகெட்டிய, மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த கோபுரம் மற்றும் நூதனசாலை நிர்மாண பணிகளுக்காக  33.9 மில்லியன் ரூபா அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக, மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கின் சாட்சி விசாரணைகள்  எதிர்வரும் ஜூலை  மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான அரசின் சிரேஷ்ட சட்டவாதி வசந்த பெரேராவும் எவ்வித எதிர்ப்பும் வெளியிடாத நிலையிலேயே இந்த சாட்சி விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு இன்று விஷேட  மேல் நீதிமன்ற தலைமை நீதிபதி சம்பத் விஜேரத்ன, சம்பத் அபேகோன், சம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோர் முன்னிலையில் சாட்சி விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்ப்ட்டது. 

இதன்போது கோத்தபாய ராஜபக்ஷ கடந்த மே மாதம் 31 ஆம் திகதி சிங்கப்பூரில் இருதய சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டதுடன், கடந்த 9 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து வெளியேறியதாகவும் அவருக்கு  6 வாரங்களுக்கு ஓய்வில் இருக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதால் வழக்கின் சாட்சி விசாரணையை ஒத்திவைக்குமாறும், முதல் பிரதிவாதியான கோத்தபாய ராஜபக்ஷவின் சட்டத்தரணியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்றி நீதிமன்றத்தில் கோரினார்.

இதற்கிணங்க, சாட்சி விசாரணையை அடுத்த மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைத்த விசேட மேல் நீதிமன்றம், கோத்தபாய ராஜபக்ஸவுக்கு வெளிநாடு செல்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தை அடுத்த மாதம் 24 ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிடுமாறும் அவர் கோரினார். 

எவ்வாறாயினும் 4 சாட்சியாளர்கள் இன்றைய தினம் சாட்சியளிக்க நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததுடன், எதிர்வரும் 26 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வழக்கின் ஒன்பதாவது சாட்சியாளரையும் அன்றைய தினம்  மன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்க மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02