இரகசியமாக தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்.; ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு

Published By: Digital Desk 4

19 Jun, 2019 | 11:20 AM
image

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளின் விபரங்களைப் பெறச்சென்ற ஊடகங்களுக்கு இன்றும் அனுமதியளிக்கப்படவில்லை. 

படையினர் ,பொலிசார் அனுமதியளித்த போதிலும் யூ.என்.எச்.சி.ஆர் அனுமதியளிக்கவில்லை. இதனால் விபரங்கள் பெறச் சென்ற ஊடகவியலாளர்கள் விபரங்களைப் பெற்றுக்கொள்ளாமல் யூ.என்.எச்.சி.ஆர் ஊடாக அனுமதி பெற்றுவருமாறு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலையடுத்து நீர்கொழும்பில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெளிநாட்டு அகதிகள் வவுனியாவிற்கு இரவோடு இரவாக அழைத்து செல்லப்பட்டு பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் இச் செயற்பாட்டிற்கு பல்வேறு அமைப்புக்களிடமிருந்தும், அரசியல்வாதிகளிடமிருந்தும், சமயத்தலைவர்களிடமிருந்தும் எதிர்ப்புக்கள் வெளிவந்திருந்தன.

கடந்த 22.05.2019 அன்று  35 அகதிகள் அழைத்துவரப்பட்டு வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இங்கு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளது குறித்து மாவட்ட அரசாங்க அதிபருக்கு எவ்வித தகவல்களையும் வழங்கியிருக்கவில்லை. அகதிகளின் விபரங்கள் வழங்கப்படவில்லை. 

முன்னர் தங்கியிருந்த அகதிகளுடன் மீண்டும்  45பாகிஸ்தான் நாட்டவர்களும், 32ஆப்கானிஸ்தான் நாட்டவர்களும், மொத்தமாக 77 அகதிகள் கடந்த 31.05.2019 அன்று அதிகாலை வவுனியாவிற்கு அழைத்துவரப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் அவர்களின் நிலைமைகள் குறித்தும் விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் ஊடகங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் அனுமதி வழங்கப்படவில்லை. கொழும்பிலிருந்த அகதிகளைச் சென்று பார்வையிடவும் அவர்களின் விபரங்களை பெற்றுக்கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நேற்று முந்தினம் 10ற்கும் மேற்பட்ட அகதிகள் வவுனியா வைத்தியசாலைக்கு மருத்துவச்சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்டிருந்தனர். எனவே அகதிகளின் நிலைமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கில் இன்று பூந்தோட்டம் புனர்வு வாழ்வு நிலையப்பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளின் நிலைமைகளை அறிந்து கொள்வதற்காக சென்ற ஊடகவியலாளர்களுக்கு விபரங்கள் வழங்காமல் யூ.என்.எச்.சி.ஆர். தொண்டு நிறுவனத்தினரிடம் அனுமதி பெற்றுவருமாறு தெரிவிக்கப்பட்டு திருப்பியனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58