பிர­தமர் ரணில் வழங்­கிய வாக்­கு­று­தியை மீறி­விட்டார்  - கோடீஸ்வரன்

Published By: Vishnu

19 Jun, 2019 | 10:17 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

கல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­து­வ­தாக பிர­தமர் பல தட­வைகள் வாக்­கு­று­தி­ய­ளித்­துள்ளார். ஆனாலும் தனது கட­மை­யி­லி­ருந்து பிர­தமர் தவ­றி­விட்டார் என தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் அம்­பாறை மாவட்ட எம்.பி. கவீந்­திரன் கோடீஸ்­வரன் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற மது­வரி கட்­டளை சட்ட விதிகள் தொடர்­பான விவா­தத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், 

அம்­பாறை மாவட்­டத்தில் கல்­முனை வடக்கு பிர­தே­சத்தில் தற்­போது மிகவும் பார­தூ­ர­மான பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது. இது நாட­ளா­விய ரீதியில் பாரிய பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யது. கல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­து­வது சம்­பந்­த­மாக மாவட்­டத்தில்   உண்­ணா­வி­ரத போராட்­டத்தை  ஆரம்­பித்­துள்­ளனர்.   30 வருட கால­மாக தர­மு­யர்த்­தப்­ப­டா­துள்ள கல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்த வேண்­டு­மென கடந்த திங்­கட்­கி­ழ­மை­யி­லி­ருந்து  உண்­ணா­வி­ர­தத்தை ஆரம்­பித்­துள்­ளனர். இந்­தப்­போ­ராட்­டத்தில் பௌத்த மதத்­த­லை­வ­ரான  ரண்­முத்­துக்­கல சங்­க­ரத்ன தேரர், கிழக்கு இந்து மத­கு­ருமார் ஒன்­றிய தலைவர் சிவஸ்ரீ சச்­சி­தா­நந்­தக்­கு­ருக்கல், மாந­க­ர­சபை உறுப்­பி­னர்கள்  சந்­தி­ர­சே­கரம் ராஜன்,விஜே­ய­ரட்ணம் ஆகியோர் உணா­வி­ரத போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். 

தற்­போது பௌத்த மதத்­த­லை­வ­ரான   ரண்­முத்­துக்­கல சங்­க­ரத்ன தேரரின் நிலை கவ­லைக்­கி­ட­மா­க­வுள்­ளது. அனைத்து மதத்­த­லை­வர்­களும் ஒன்று சேர்ந்து கல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­தித்­த­ர­வேண்­டு­மென்று கோரியே உண்­ணா­வி­ர­த­மி­ருக்­கின்­றனர். ஒரு இனத்தை அடி­மை­யாக வைக்­கக்­கூ­டாது என்­ப­தற்­காக ,ஒரு இனத்­துக்கு செய்­யப்­பட்ட அநீ­திக்­காக நீதி கோரு­கின்­ற­வர்­க­ளாக ,அந்த இனத்­துக்­கான உரி­மையை கோரு­கின்­ற­வர்­க­ளாக இன்று அவர்கள் உண்­ணா­வி­ரத போராட்­டத்தை ஆரம்­பித்­துள்­ளனர். 

இந்த அர­சிடம் நாம் பல­த­டை­வைகள் கல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்த வேண்­டு­மென்ற பல கோரிக்­கை­களை முன்­வைத்தோம். பல கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தி­யி­ருந்தோம். பிர­தமர் கூட இதனை தர­மு­யர்த்­தித்­த­ரு­வ­தாக பல தடை­வைகள் வாக்­கு­று­தி­ய­ளித்­துள்ளார். ஆனாலும் தனது கட­மை­யி­லி­ருந்து பிர­தமர் தவ­றி­விட்டார். எங்­களை பல தடை­வைகள் ஏமாற்­றி­விட்டார். 1993 ஆம் ஆண்டு இந்த கல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்த அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் கிடைத்­தது. ஆனால் 30 வரு­டங்­க­ளாக தமிழ் மக்­க­ளுக்­கான இந்த உரிமை மறுக்­கப்­பட்­டுள்­ளது. 

அடிப்­படை மத­வா­தத்தை தோற்­று­வித்து இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்தை, இஸ்­லா­மிய ராஜ்­ஜி­யத்தை உரு­வாக்­கு­வ­தற்கு உறு­து­ணை­யாக நிற்­ப­வர்கள் தான் இந்த தமிழ் மக்­க­ளுக்­கான கல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்த தடை போடு­கின்­றனர். அந்தப் பிர­தே­சத்­திலே இருக்­கின்ற 46ஆயிரம் மக்­க­ளுக்­கான அந்த உரிமை கிடைக்­கக்­கூ­டாது என்­ப­தனை அவர்கள் நிலை­நி­றுத்தி அந்­தப்­பி­ர­தே­சத்­திலே இஸ்­லா­மிய தீவி­ர­வா­திகள் அத­னைத்­த­டுத்து நிறுத்­து­கின்­றனர். இந்த  இஸ்­லா­மிய தீவி­ர­வா­தி­க­ளுக்கு, மத அடிப்­படை வாதி­க­ளுக்கு உறு­து­ணை­யா­கவே இந்த அரசும் செயற்­ப­டு­கின்­றது. இதனை ஏறுக்­கொள்ள முடி­யாது.

கல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச செய­ல­கத்­தை­த­ர­மு­யர்த்­தக்­கோ­ரு­வது நியா­ய­மான கோரிக்­கை­யாகும்.  இதனால் தமிழ் மக்கள் பிரச்­சி­னையை எதிர்­நோக்­கு­கின்­றனர். அவர்­க­ளுக்­கு­ரிய நிர்­வாகம் கிடைக்க வேண்டும், அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் கிடைத்­துள்­ளது. அதற்­கு­ரிய சகல வளங்­களும் உள்­ளன. 29 கிராம சேவகர் பிரி­வு­க­ளையும் 234 ஆள­ணி­க­ளையும் கொண்­ட­தாக இருக்­கின்­றது. அதற்­கான நிதி அதி­கா­ரமும் காணி அதி­கா­ரமும் மறுக்­கப்­பட்­டுள்­ளன என்று அரசு கூறு­கின்­றது. ஆனால் 30 வரு­டங்­க­ளாக தமிழ் மக்கள் ஏமாற்­றப்­பட்டு வரு­கின்­றனர். 

இதற்கு காரணம் யார்?கல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­தக்­கூ­டா­தென தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்­பினர் பள்­ளி­வா­சலில் தீர்­மா­ன­மெ­டுத்து அதற்­கான அறிக்­கை­யையும் வெளி­யிட்­டனர். ஆகவே இந்த அரசு தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் கருத்தை ஏற்­றுக்­கொண்­டு­தானே கல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­தா­துள்­ளது?தமிழ் மக்­க­ளுக்­கான நீதி கிடைக்­கக்­கூ­டா­தென தடுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த உய­ரிய சபையில் கூட நாம் தர­மு­யர்த்தல் வேண்­டு­கோளை விடுத்­தி­ருந்தோம்.எங்­க­ளது கட்­சியும் இது தொடர்பில் பிர­த­மரை சந்­தித்­தது.ஆனால் வாக்­கு­றுத்தி அளித்து அளித்தே பிர­தமர் தமி­ழர்­களை ஏமாற்றி விட்டார். அர­சியல் தீர்­வைத்­த­ர­வில்லை,குறைந்­த­பட்சம் கல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்தி தரு­வ­தற்கு கூடவா  இந்த அரசு மறுக்­கின்­றது என தமிழ் மக்கள் எங்­க­ளிடம் கேட்­கின்­றனர். 

எமது மக்­க­ளுக்கு மறுக்­கப்­பட்ட நீதியை, உரி­மையை இந்த சபை தர வேண்டும். கல்முனை நகரம் 95 வீதம் தமிழர்களின் பிரதேசம். இவர்களுக்கான உரிமையே மறுக்கப்பட்டுள்ளது. கல்முனை பிரதேசத்தை மாற்றும் நடவடிக்கை கூட எடுக்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார சபையால் நாட்டப்பட்ட பெயர்ப்பலகை கல்முனை நகரத்திலிருந்து கல்முனைக்குடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது பெரும் அநீதி. இந்த அதிகாரத்தை,அங்கீகாரத்தை கொடுத்தது யார்? கல்முனைக்குடி என்பது வேறு,கல்முனை என்பது வேறு. தமிழர்களின் செறிவைக்குறைக்கவே இவ்வாறு செயற்படுகின்றனர். எனவே அரசு உடனடியாக இதில் தலையிட்டு கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37