அமெ­ரிக்க நிறு­வ­னத்தில் சம்­பளம் பெறு­பவர் சபா­நா­ய­கரின் ஆலோ­ச­க­ராக இருக்­க­லாமா?  

Published By: R. Kalaichelvan

19 Jun, 2019 | 09:52 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

அமெ­ரிக்க நிறு­வனம் ஒன்றில் சம்­பளம் பெறு­பவர் பாரா­ளு­மன்­றத்தில் சபா­நா­ய­கரின் ஆலோ­ச­க­ராக இருப்­பது பாரா­ளு­மன்­றத்­துக்கு பாரிய அச்­சு­றுத்­த­லாகும் என எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற  உறுப்­பினர் தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. நேற்று சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்றம் நேற்று சபா­நா­யகர் கரு ­ஜ­ய­சூ­ரிய  தலை­மையில் கூடி­யது. பிர­தான நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்ற பின்னர் விசேட கூற்­றொன்றை முன்­வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே  அவர்  இவ்­வாறு குறிப்­பிட்டார். 

அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில்,

பிரசாத் காரி­ய­வசம் அமெ­ரிக்க நிறு­வனம் ஒன்றின் சம்­ப­ளத்தில் பாரா­ளு­மன்­றத்தின் சபா­நா­ய­கரின் சர்­வ­தேச ஆலோ­ச­க­ரக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அவ்­வா­றா­ன­தொரு பதவி பாரா­ளு­மன்ற நிகழ்ச்சி நிரலில் இல்லை. அப்­ப­டி­யி­ருக்­கையில் அமெ­ரிக்க நிறு­வனம் ஒன்றில் சம்­பளம் பெறு­பவர் பாரா­ளு­மன்­றத்தில் சபா­நா­ய­கரின் ஆலோ­ச­க­ராக இருப்­பது பாரா­ளு­மன்­றத்­துக்கு பாரிய அச்­சு­றுத்­த­லாகும்.

ஏனெனில் கடந்த வாரம் வெளி­நாட்டு தூது­வர்­களை உங்கள் உத்­த­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்­துக்கு அழைத்து கதைத்­தீர்கள். அதில் எங்­க­ளுக்கு பிரச்­சி­னை­யில்லை. அதற்­கான அதி­காரம் உங்­க­ளுக்கு இருக்­கின்­றது. ஆனால் அந்த கலந்­து­ரை­யா­ட­லுக்கு நாட்டின் புல­னாய்வு துறையின் பிர­தா­னியை அழைத்­தி­ருந்­தீர்கள். அதில்  நாட்டின் பாது­காப்பு தகவல் கசியும் அபாயம் இருப்­பதால் அவரை அந்த இடத்­துக்கு அழைக்­க­வேண்டாம் என்று யாரும் ஆலாே­சனை தெரி­விக்­க­வில்­லையா?. அதனால் பிரசாத் காரி­ய­வசம் அமெ­ரிக்க அர­சாங்­கத்தால் சம்­பளம் பெறு­பவர்.  உங்­க­ளுக்கு ஆலோே­சனை தரு­வது மாத்­தி­ரமா அல்­லது எமது தக­வல்­களை வெளி­நாட்­டுக்கு விநி­யோ­கிப்­ப­தற்­குமா இருக்­கின்றார் என்று கேட்­கின்றேன்.

இதற்கு சபா­நா­யகர் விளக்­க­ம­ளிக்­கையில், 

இலங்­கையில் இருக்கும் முஸ்லிம் தூது­வர்கள் மற்றும் இஸ்­லா­மிய அர­சாங்­கங்கள் இலங்­கையின் நிலைமை தொடர்­பாக அறி­விப்­பொன்றை விடுத்­தி­ருந்­தனர். அவர்­களின் கவ­லை­யையும் தெரி­வித்­தி­ருந்­தனர். அதனால் நான் நாட்டின் தற்­போ­தைய நிலை தொடர்­பாக விளங்­கப்­ப­டுத்த முஸ்லிம் நாடு­களின் தூது­வர்­களை பாரா­ளு­மன்­றத்­துக்கு அழைத்தோம். இதன்­போது பொலிஸ்மா அதிபர் மற்றும் வேறு அதி­கா­ரி­களும் வந்­தி­ருந்­தனர். அவ்­வாறு இல்­லா­விட்டால் இலங்­கைக்­கெ­தி­ராக பாரிய வேலைத்­திட்டம் ஒன்றை அவர்கள் ஆரம்­பிக்க இருந்­தனர்.

அதனால் இலங்­கையில் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றதை அவர்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்தே அழைத்­தி­ருந்தோம். மாறாக எமது இர­க­சிய தக­வல்­களை வெளிப்­ப­டுத்­த­வல்ல. அத்­துடன் பிரசாத் காரி­ய­வசம் முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சின் செய­லாளர். அவர் வேறு நாடு­களின் பாரா­ளு­மன்ற விட­யங்கள் தொடர்­பாக எமது உறுப்­பி­னர்கள் அங்­கு­சென்று கண்­கா­ணிக்­கவும் பயிற்சி நட­வ­டிக்­கை­களை பெற்­றுக்­கொள்­ளவும் தேவை­யான வேலைத்­திட்­டங்­க­ளுக்கு அமெ­ரிக்­காவின் நிறு­வனம் ஒன்றின் புல­மைப்­ப­ரிசில் பெற்­றுள்ளார். அவர் எனக்கு உத­வி­யாக இருக்­கின்றார். அவ்­வாறு இல்­லாமல் எமது ரக­சி­யங்­களை வெளி­நா­டு­க­ளுக்கு விநி­யோ­கிப்­ப­தற்கு அவர் செயற்­ப­டு­வ­தில்லை என்றார். 

இதன்­போது மீண்டும் எழுந்த தினேஷ் குண­வர்த்­தன, முன்னாள் வெளி­வி­வ­கார செய­லாளர் ஒரு­வரை வெளி­நாட்டு நிறு­வனம் ஒன்றின் சம்­ப­ளத்தில் பாரா­ளு­மன்­றத்தில் வைத்­தி­ருக்­க­வேண்­டுமா. பாரா­ளு­மன்­றத்தால் அவ­ருக்கு சம்­பளம் வழங்கி வைத்­தி­ருந்தால் பிரச்­சினை இல்லை என்றார்.  

அதன்­போது எழுந்த எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ், சுயா­தீன பாரா­ளு­மன்­றத்தில் வெளி­நாட்டு நிறு­வனம் ஒன்­றினால் சம்­பளம் வழங்கும் ஒரு­வரை வைத்­துக்­கொள்ள முடி­யாது. அது­மு­றை­யில்லை. பாரா­ளு­மன்­றத்தால் சம்­பளம் வழங்க நட­வ­டிக்கை எடுத்தால் பிரச்­சினை இல்லை. இல்­லா­விட்டால் பாரா­ளு­மன்­றத்தின் கெள­ரவம் வெளி­நாட்டு சக்­தி­க­ளுக்கு கீழ்­ப­டி­கின்­றது என்ற சந்­தேகம் ஏற்­படும் என்றார். 

இதன் சபா­நா­யகர் பதி­ல­ளிக்­கையில் ஜனா­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்தும் வேலைத்­திட்­டத்­துக்­காக அந்த நிறு­வ­னத்தின் நிதியில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் 70க்கும் மேற்­பட்­ட­வர்கள் வெளி­நாட்டு சுற்­றுலா சென்­றி­ருக்­கின்­றனர். பயிற்­சி­க­ளுக்கு சென்­று­ருக்­கின்­றனர். இவை அனைத்தும் ரக­சி­யங்­களை வழங்க செல்­ல­வில்லை என்றார். 

இதன்­போது எழுந்த பிர­தமர், அமெ­ரிக்­காவால் உதவி பெற முடி­யா­விட்டால் டிஸ்னி உலகில் இருந்து உதவி பெற்­றுக்­கொள்­ளுங்கள் என்று நகைச்­சு­வை­யாக தெரி­வித்தார்.

இதன்­போது எழுந்த எதிர்க்­கட்சி உறுப்­பினர் காமினு லாெக்­குகே தெரி­விக்­கையில், 

வெளி­நாட்டு நிதியில் சுற்­றுலா செல்ல எனக்கு சந்­தர்ப்பம் வழங்­க­வில்லை. நான் அதில் செல்­லவும் இல்லை. என்றார். 

அதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில் முதல்தர   ஆசனத்தில் இங்கிலாந்துக்கு செல்ல என்னிடம் நீங்கள் கேட்டு, சென்று வந்தீர்கள். அவ்வாறு சென்றுவந்து தற்போது ஏன் பொய் சொல்கிறீர்கள். பொய்சொல்ல வெட்கப்படவேண்டும் என்றார்.

இதன்போது நிமல் லான்சா எழுந்து, யார் வேண்டுமானாலும் சம்பளம் கொடுத்தால் நீங்கள் யாரைவேண்டுமானாலும் ஆலாேசகராக நியமித்துக்கொள்வீர்களா? என்றார்

அதற்கு சபாநாயகர்,  முட்டாள்த்தனமான கேள்விகளை சபையில் கேட்கவேண்டாம். சபையின் கெளரவத்தை பாதுகாத்து  பேசுங்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44