(நா.தினுஷா)
பல்துறைசார் தொழில் வாய்ப்புக்களை மையப்படுத்தி ஜப்பானுடன் இலங்கை நாளை இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ் நாணயக்கார தெரிவித்தார்.
உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரிண் பெர்ணான்டோ, ஜப்பான் சுகாதாரம், தொழில் உறவுகள் மற்றும் நலன்புரி அமைச்சர் மற்றும் விவசாயம், வனவியல் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் ஆகியோரின் தலைமையில் நாளை புதன்கிழமை இலங்கை நேரப்படி ஒரு மணியளவில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
14 துறைசார் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க ஜப்பானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த தொழில் வாய்ப்புக்களை வழங்கவென பிரதானமாக 9 நாடுகள் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் ஏழாவது நாடாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஜப்பான் அரசாங்கத்தால் வழங்கப்படும் இந்த பல்துறைசார் தொழில் வாய்ப்புக்கள் எமது வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்களில் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இது தொடர்பில் விளமளித்துள்ளார்.
பராமரிப்பு தொழிலாளர், கட்டட சுத்த முகாமைத்துவம், இயந்திர பாகம் மற்றும் கருவி இயக்க துறை, தொழில்துறைசார் இயந்திர துறை, மின்சார, மின்னணு மற்றும் தகவல் துறை, கட்டுமான துறை, கப்பல் கட்டுமானம் மற்றும் கப்பல் இயந்திர துறை, ஒடோ மொபைல் மற்றும் பழுதுபார்த்தல் துறை, விமானத்துறை, ஹோட்டல் துறை, விவசாயம், மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு, உணவு மற்றும் குடிவகை உற்பத்தி மற்றும் உணவு பரிமாற்றல் துறை உள்ளிட்ட 14 வகையான வரையரையற்ற தொழில்வாய்ப்புக்களை ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு வழங்கவுள்ளது.
இந்த வேலைவாய்ப்புக்களை உத்தியோக பூர்வமாக பெற்றுக்கொள்ளும் வகையில் இருநாட்டுக்கும் இடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு நாளை புதன் கிழமை ஜப்பானில் இடம்பெறும். இந்த ஒப்பந்த்தில் அமைச்சர் ஹரிண் பெர்ணான்டோ கைசாத்திடவுள்ளார். குறித்த ஒப்பந்தம கைச்சாத்திட்டது முதல் எதிர்வரும் 10 வருடங்களுக்கு மாத்திரமே செலுப்படியானதாக இருக்கும்.
மேலும் ஜப்பானுடனான இந்த ஒப்பந்த்தினூடாக திறமையான உள்நாட்டு தொழிலாளர்களை உருவாக்குவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திகொள்ள முடியும். இதற்கான பயிற்ச்சி நடவடிக்கைகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு முன்னெடுத்து வருகிறது. இதேவேளை தற்போதுள்ளதைவிட இன்னும் அதிகமாக தொழில் பயிற்சிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் எதிர்பார்க்கிறோம்.
அதேபோன்று இதனூடாக ஜப்பான் நாட்டின் தொழிசார் தொழில் நுட்ப அறிவுகளையும் எம்மால் பெற்றுக்கொள்ள கூடியதாக அமைவதோடு அந்த நாட்டு தொழில் நிபுணர்களின் பயற்சிகளையும் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும். ஜப்பான் அரசாங்கத்தால் இவ்வாறான தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM