பாகிஸ்தானின் மாகாண அரசாங்கமொன்றின் அமைச்சர்கள் கூட்டமொன்று பேஸ்புக் ஊடாக நேரடியாக ஒளிபரப்பப்பட்ட சந்தர்ப்பத்தில், அமைச்சர்கள் பூனைகள் போன்று தோற்றமளித்த சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றது.
மனிதர்களை பூனைகள் போன்று தோற்றமளிக்கச் செய்யும் 'கெட் பில்டர்' என்ற செயலி தவறுதலாக அழுத்தப்பட்டமையே இதற்கான காரணம்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் அமைச்சர்கள் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டம் முழுவதையும் நேரடியாக பேஸ்புக்கில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டம் பேஸ்புக்கில் ஒளிபரப்பப்பட்டபோது, 'கெட்' பில்டர்' தவறுதலாக அழுத்தப்பட்டது. இதனால், இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் பூனைகளாக தென்பட்டனர்.
இதைப் பார்த்த பலர் திகைப்படைந்த நிலையில், மேற்படி தவறை உணர்ந்த பார்வையாளர் ஒருவர், 'கெட் பில்டரை அகற்றுங்கள். மனிதர்கள் பூனைகளாக தென்படுகின்றனர்' என கொமண்ட் செய்தார்.
அதையடுத்து மேற்படி கெட் பில்டர் அகற்றப்பட்டது. எனினும், அதற்குமுன் எடுக்கப்பட்ட ஸ்கிறீன் ஷொட்கள் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பரவத் தொடங்கின.
மேற்படி விடயம் ஒரு மனிதத் தவறு என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பி.ரி.ஐ. கட்சியைச் சேர்ந்த மாகாண தகவல் தொடர்புத்துறை அமைச்சர் சௌகத் யூசுப்ஸாய் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM