அவுஸ்திரேலிய சிட்னி நகரிலுள்ள ஓபல் மற்றும் மஸ்கொட் கோபுர கட்டடங்களில் அண்மையில் பிளவுகள் ஏற்பட்டமை அவதானிக்கப் பட்டுள்ள நிலையில் மேலும் பல்லாயிரக்கணக்கான புதிய வானுயர்ந்த கட்டடங்களில் பிளவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
122 குடியிருப்புகளை உள்ளடக்கிய மஸ்கொட் கோபுரக் கட்டடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பிளவுகள் அவதானிக்கப்பட்டதையடுத்து அந்தக் கட்டடத்தில் குடியிருந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
நிர்மாணிக்கப்பட்டு ஒரு தசாப்த காலமேயான மேற்படி கட்டடத்தின் அடித்தளத்தில் ஏற்பட்ட பிளவு அகலமானதையடுத்து அந்தக் கட்டடத்திலிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த கட்டடத்தில் ஏற்பட்ட வெடிப்புக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடமே காரணம் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதற்கு முன்னர் கடந்த வருட நத்தார் பண்டிகைக்கு முதல் நாள் சிட்னி ஒலிம்பிக் பூங்காவிலுள்ள ஓபல் கோபுரக் கட்டடத்தில் பிளவுகள் ஏற்படுவதை வெளிப்படுத்தும் பாரிய சத்தங்கள் கேட்டதையடுத்து அங்கு வசித்த அனைவரும் வெளியேற்றப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கட்டட நிர்மாணம் தொடர்பான நிபுணரும் ஆலோசகருமான எட்வின் அல்மெடியா தெரிவிக்கையில், மேற்படி கட்டடங்களில் ஏற்பட்ட பிளவுகளானது பாரிய பரந்தளவான பிரச்சினையொன்றின் பிரதிபலிப்பாக உள்ளதாக கூறினார்.
நிர்மாண செயற்கிரமங்களிலுள்ள ஒழுங்கீனங்கள், வானுயர்ந்த மாடிக் கட்டடங்களை நிர்மாணிக்கப் பொருத்தமற்ற நிலங்களில் அத்தகைய கட்டடங்களை நிர்மாணித்தல் மற்றும் நிர்மாணத்தில் ஈடுபடுபவர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள் என்பன இவ்வாறு கட்டடங்களில் பிளவு ஏற்பட்டு அவை இடிந்து விழத்தயாராவதற்கு காரணமாவதாக அவர் தெரிவித்தார்.
பல உயரமான குடியிருப்பு மாடிக் கட்டடங்களில் அத்திவாரத்திலான பிரச்சினைகள, பூஞ்சண பாதிப்பு மற்றும் நீர் ஊடுருவல் காணப்படுவதும் அந்தக் கட்டடங்களில் பிளவு ஏற்படக் காரணமாக அமைவதாக அவர் கூறினார்.
குறைந்த தரமுள்ள கொங்கிறீட்டைப் பயன்படுத்தி அத்திவாரமிடப்பட்ட உயர்ந்த மாடிக் கட்டடங்கள் பெரும் அபாயமிக்கவை என அவர் எச்சரிக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM