வவுனியா மூனாமடுக் குளத்தின் நீர் வற்றியமையால் இறந்த மீன்களினை அகற்றுவதற்தற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக சுகாதார பணிமனையில் மாவட்ட பொது சுகாதார பரிசோதர் எஸ்.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா, புதுக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மூனாமடு குளத்தின் கீழ் விதைக்கப்பட்டுள்ள 45 ஏக்கர் சிறுபோக விவசாய நிலங்களுக்கு அதிகளவிலான நீரை பயன்படுத்தியமையால் குளத்து நீர் வற்றியுள்ளது.
இதன்காரணமாக நீர் இன்றி அக்குளத்தில் இருந்த ஏராளமான மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து வவுனியா சுகாதார பரிசோதகர்களுக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட சுகாதார பரிசோதர்கள் குறித்த நீர்பாசன குளத்தின் பங்காளர்களின் துணையுடன் இறந்த மீன்களை அகற்றி புதைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த குளத்தின் நீர்மட்டத்தை கவனத்தில் கொள்ளாது சிறுபோக நெற் செய்கைக்கு நீர் இறைக்கப்பட்டமையே மீன் இறப்புக்கு காரணம் எனவும், சம்மந்தப்பட்டவர்களின் பொறுப்பற்ற செயற்பாடே இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM