கடந்த 30 வருட காலமாக இயங்கிவருகின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரம் தொடர்பில் நாம் பல தடவைகள் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரைச் சந்தித்து கோரிக்கைவிடுத்தோம். செய்து தருவதாக உறுதியளித்தனர். ஆனால் இந்தக்கணம் வரை எதுவுமே நடைபெறவில்லை. எனவே தரமுயர்த்தப்படும் வரை சாகும் வரை உண்ணாவிரதமிருப்போம்.
இவ்வாறு கல்முனையில் இடம்பெற்றுவரும் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டுள்ள உண்ணாவிரதியான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் வரை நேற்று திங்கட்கிழமை காலை கல்முனையில் சாகும்வரையிலான உண்ணாவிரதம் ஆரம்பமாகியிருக்கிறது.
கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றிலில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர், கல்முனை முருகன் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்தக் குருக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன், அ.விஜயரெத்தினம் ஆகியோர் முதற்கட்டமாக உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர். மேலும் பலர் இதில் இணைந்துவருகின்றனர். உறுப்பினர் ராஜன் மேலும் கூறுகையில்,
எமது நீண்ட காலக் கோரிக்கையை தொடர்ந்துவந்த அரசாங்கங்கள் இழுத்தடித்து வந்துள்ளன. இனியும் நாம் பொறுமை காக்கத் தயாரில்லை. எனவே நாம் களத்தில் இறங்குகின்றோம்.
நாம் ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயா, எமது த.தே.கூட்டமைப்பு எம்.பி.க்
கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அனைவரையும் சந்தித்துப் பேசினோம். யாரும் மறுக்கவில்லை. செய்து தருவதாகவே வாக்குறுதியளித்தார்கள்.
எமது பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் பலத்த முயற்சி மேற்கொண்டிருந்தார். அதுகூட கைகூடவில்லை. அவர் நாளை எம்முடன் இணையவிருக்கிறார்.
ஆனால் இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கிய எங்களை தொடர்ந்து அவ்வரசாங்கம் ஏமாற்றி வருகிறது.
கல்முனையிலுள்ள ஓர் அரசியல் வாதிக்காக இரு இனங்களையும் பிரித்துப்பார்க்கிறார்கள். எமது இந்தப் போராட்டம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானதல்ல. எந்த இனத்துக்கோ சாதிக்கோ எதிரானதல்ல.
எனது முயற்சியால் முஸ்லிம்களின் தலைவர் அமைச்சர் ஹக்கீமை கொழும்பில்சந்தித்துப் பின்னர் கல்முனையில் கலந்துரையாடியபோது தரமுயர்த்தலில் தமக்கு எவ்வித எதிர்ப்புமில்லை என்று கூறியிருந்தார்.
நாம் எமது மக்களின் தேவைகளை தடையின்றிப் பெற்றுக்கொள்ள இயங்கிவரும் அலுவலகத்தை தரமுயர்த்துமாறே கேட்கிறோம். இதனால் முஸ்லிம் மக்களுக்கு எவ்வித பாதிப்புமில்லை.
எமது தமிழ் மக்களின் ஒத்துழைப்பு இதற்கு பூரணமாகக் கிடைக்குமென பெரிதும் நம்புகிறோம். எம்முடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட விரும்புவோர் தாராளமாக கலந்து கொள்ள முடியும்.
இது தினம் தினம் தமிழ்ப் பிரதேசமெங்கும் தொடர்ந்து வியாபிக்கும். முதலில் அம்பாறை மாவட்டம், மட்டு.மாவட்டம் எனத் தொடர்ந்து முழு வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் இதனை விஸ்தரிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்தக் குருக்கள் கருத்துரைக்கையில்,
கடந்த 30 வருட காலமாக இயங்கி வரும் எமது பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி எமது மக்கள் சௌகரியத்துடன் சேவையைப் பெற இந்த அரசாங்கம் உடனடியாக தரமுயர்த்த வேண்டும். ஒரு சில அடிப்படைவாத அரசியல்வாதிகளின் சுயநல அரசியலுக்காக இரு இனங்களையும் மோதவிடமுடியாது.
இந்த வடக்குப் பிரதேச செயலக விவகாரத்தால் இன்று கல்முனையில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே பாரிய விரிசல் காணப்படுகிறது.
அதனை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமாகவிருந்தால் இப்பிரச்சினையை இன்றோடு தீர்த்துவிட அரசைக் கோருகின் றேன் என்றார்.
வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் கூறுகையில்: இந்தக் கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதில் யாருக்குப் பிரச்சினை? அதற்கான காரணங்கள் என்ன? சகல மக்களதும் தேவைகளை இலகுவாக பூர்த்தி செய்யவே இத்திட்டம். அதில் ஓர் இனம் பாதிக்கப்பட முடியாது. எனவே அரசாங்கம் உடனடியாகத் தரமுயர்த்தி மக்களின் அடிப்படைத் தேவையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM