உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் பின்னர் ஊடகங்களைச் சந்திக்காமல் இலங்கை அணி புறக்கணித்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்திவரும் ஐ.சி.சி. இலங்கை அணிக்கு பெரும் தண்டனை வழங்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 87 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இந்தப் போட்டிக்குப் பிறகு ஊடகவியலாளர்களைச் சந்திக்காமல் இலங்கை அணி புறக்கணித்துள்ளது.
ஐ.சி.சி.யின் விதிமுறைப்படி போட்டி முடிந்த பின் வெற்றி பெற்ற அணியும் தேல்வியடைந்த அணியும் ஊடகங்களைச் சந்தித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது. இந்த விதிமுறையை மீறிய இலங்கை அணி ஆஸி.க்கு எதிரான போட்டி முடிந்த பின் அனைத்து வீரர்களும் ஊடகவியலாளர்களைச் சந்திக்காமல் சென்றுவிட்டனர்.
இது ஐ.சி.சி. விதிமுறையின்படி ஒழுக்கக்கேடானது, விதிமுறை மீறல் என்பதால் இலங்கை அணிக்கு தடைவிதிப்பது குறித்து ஐ.சி.சி. ஆலோசிப்பதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து ஐ.சி.சி. செய்தித் தொடர்பாளர் நிருபர்களிடம் கூறுகையில், ஐ.சி.சி. விதிமுறையின்படி போட்டி முடிந்தபின் தோற்ற அணியும் வெற்றிபெற்ற அணியும் ஊடகங்களைச் சந்தித்துப் பேட்டி கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதை மீறியது இலங்கை அணியின் தவாறுகும். இந்த தவறுக்கு நிச்சயம் இலங்கை அணிக்கு தண்டனை உண்டு. அதிகபட்சமாக தடை விதிக்கக்கூடிய அனைத்து முகாந்திரங்களும் இருக்கின்றன. விரைவில் முடிவு அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இலங்கை அணியின் முகாமையாளரும், தெரிவுக்குழுத் தலைவருமான அசந்த டிமெல் ஐ.சி.சி. குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். உலகக் கிண்ணத் தொடரில் பங்ேகற்க வந்திருக்கும் 10 அணிகளையும் சமமாக நடத்த வேண்டியது ஐ.சி.சி.யின் பொறுப்பாகும். ஆனால் ஒவ்வொரு அணியையும் அவர்களின் தரத்துக்கு ஏற்ப நடத்துவது மாற்றாந்தாய் மனப்பான்மையை காட்டுகிறது.
இலங்கைக்கு போதுமான பயிற்சி வசதிகள் இல்லை. போக்குவரத்து வசதி கிடையாது. உலகத்தரத்தில் விளையாடும் அணிகளுக்கு தங்கும் வசதிகூட மோசமான நிலையில் இருக்கிறது. இலங்கை போன்ற சிறிய அணிகளுக்கு சாதாரண பேருந்து மற்ற அணிகளுக்கு சொகுசு பேருந்து ஹேட்டலில் தங்கும்வசதியும் முறையாக இல்லை என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM