(இராஜதுரை ஹஷான்)
பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடை யில் பரந்துப்பட்ட கூட்டணியை அமைத்தலுக்கான இரு தரப்பு ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ களமிறக்கப்படுவார் என்ற நிலைப்பாட்டில் எதிரணியினர் உறுதியாக உள்ளார்கள். எனினும் கோத்தபாய ராஜபக்ஷ தான் ஜனாதிபதி வேட்பாளர் எனின் பரந்துப்பட்ட கூட்டணி அமைக்கும் தீர்மானம் மீள்பரிசீலனை செய்யப்படும் என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் பரந்துப்பட்ட கூட்டணியமைத்தல் தொடர்பிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை ஐந்து கட்டங்களை நிறைவு செய்துள்ளது எனினும் கூட்டணியமைத்தல் தொடர்பில் எவ்வித உரிய தீர்மானங்களும் இதுவரையில் எட்டப்படவில்லை. பரந்துப்பட்ட கூட்டணியமைத்தலுக்கான இறுதி தீர்மானம் இம்மாத இறுதிக்குள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .
இதுவரை முடிவுற்றுள்ள ஐந்து கட்ட பேச்சுவார்த்தைகளிலும் இரு தரப்பினதும் கட்சி கொள்கைகளும் ஆராயப்பட்டன. இதன் பின்னர் இரண்டு தரப்பிற்கும் ஒருமித்த கொள்கை உருவாக்கம் பெற்று அவை கட்சிகளின் உறுப்பினர்களின் கருத்தாடலுக்கு விடப்பட தீரமானிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே பரந்துப்பட்ட கூட்டணி தொடர்பில் இறுதி தீரடமானம் எட்டப்படும்.
பரந்துப்பட்ட கூட்டணி தொடர்பில் பொதுஜன பெரமுனவினர் குறிப்பிடுகையில்
ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக பலமான கூட்டணியமைக்கப்பட வேண்டும் என்ற காரணத்தினாலேயே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் பரந்துப்பட்ட கூட்டணியமைத்தலுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டன. ஆனால் சுதந்திர கட்சியினர் இன்றும் கடந்த கால பிணக்குகளுடனே செயற்படுகின்றார்கள். கட்டாயப்படுத்தி கூட்டணியமைப்பதால் எவ்வித பயனும் கிடைக்காது மாறாக அரசியல் நெருக்கடிகளே ஏற்படும்.
இரு தரப்பினரும் கூட்டணியமைத்தாலும் பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தினையும் கட்சியின் தலைமைத்துவத்தினையும் ஒருபோதும் எக்காரணிகளுக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி தேர்தலில் எமது தரப்பு ஜனாதிபதியாக களமிறக்க கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்கள் என்று தெரிவித்தனர்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட வேண்டும் என்றே சுதந்திர கட்சியினர் ஆரம்பத்தில் குறிப்பிட்டார்கள். பரந்துப்பட்ட கூட்டணியமைத்தல் தொடர்பில் முடிவுற்ற ஐந்தாவது பேச்சுவார்த்தையின் போது கூட்டணியின் ஊடாகவே ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரும் பிரதமரும் தெரிவு செய்யப்படுவார் என்று சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ என்பது உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் இரு தரப்பினருக்கும் இடையிலான பரந்துப்பட்ட கூட்டணியமைத்தல் தொடர்பில் சுதந்திர கட்சி மறுசீலனை செய்யும். அல்லது தனித்து போட்டியிடும் தீர்மானமும் எடுக்கப்படும். எனபது பரந்துப்பட்ட கூட்டணி தொடர்பில் சுதந்திர கட்சியின் நிலைப்பாடாக காணப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM