ரஷ்யாவின் திர்குட்யாக் என்ற ஆற்றிலிருந்து சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓநாயின் தலையொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது .
ரஷ்ய நாட்டின் சேர்பியாவுக்குட்பட்ட யாகுடா பகுதியினூடாக திர்குட்யாக் என்ற ஆறு பாய்கிறது. இந்நிலையில் இவ் ஆற்றிலிருந்து யாகுடா பகுதியினை சேர்ந்த பவேல் என்ற நபர் ஓநாயின் தலையொன்றினை கண்டெடுத்துள்ளார். ஓநாயின் தலை மிகவும் வித்தியாசமான உருவ அமைப்பினை கொண்டிருந்ததால் அதனை அப்பகுதி மக்கள் யாகுடாவில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர்.
அந்த ஓநாயின் தலையினை ஆய்வு செய்த யாகுடாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அதன் வாழ்நாள் காலம் குறித்த அடுத்தகட்ட ஆய்வுக்காக ஜப்பான் மற்றும் சுவீடன் நாட்டிலுள்ள சக ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அந்த ஓநாய் தலையின் மாதிரிகளை அனுப்பி வைத்துள்ளனர்.
ஜப்பான் மற்றும் சுவீடன் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுக்கப்பட்ட ஓநாயின் தலையின் மாதிரிகளை ஆராய்ந்ததில் அது சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓநாயின் தலை என கண்டுபிடித்துள்ளனர் . மேலும் பனியில் இருந்ததால் அதன் தலைப் பகுதி அழுகாமல் உறைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இது குறித்து மேலும் பல்வேறு ஆராய்ச்சிகளை ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட உறைந்த நிலையிலிருந்த ஓநாயின் தலை ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டமை பல ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM