வடக்கிலிருந்து 'சமஷ்டி' என்ற குரல் ஏன்   வந்தது? : மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதி விளக்கம்

Published By: MD.Lucias

01 May, 2016 | 08:13 PM
image

(காலியிலிருந்து ப.பன்னீர்செல்வம்)

வடக்கிலிருந்து சமஷ்டி என்ற குரல் ஏன்   வந்தது என்பது தொடர்பில் ஆராய்ந்து சிந்தித்து ஒன்றுபட்ட  இலங்கைக்குள் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டுமென்று இன்று காலியில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றும்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார். 

அடுத்த பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியை ஏற்படுத்த முரண்பாடுகளை மறந்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபடுவோம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

காலியில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி மாலை 4.20 க்கு வருகை தந்தார். வந்த சில மணித்தியாலயங்களில் மழை ஆரம்பித்தது. ஆனாலும் காலி சந்தியிலிருந்து புறப்பட்டிருந்த ஊர்வலம் தொடர்ந்து  ஊர்வலமாக வந்து கொண்டிருந்தன. இந்த சூழ்நிலையிலேயே ஜனாதிபதி திறந்தவெளியில் மேடையில் பேசாது விசேடமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் உரையாற்றினார். 

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, 

1956 களிலும் 1960 களிலும் வடக்கிலிருந்து சமஷ்டி வேண்டுமென்ற குரல் ஒலித்தது. அதேபோன்று 26 வருடகாலம் நாட்டில் பயங்கர யுத்தமும் நிலவியது. எனவே சமஷ்டி தேவை என்ற  குரல் ஏன் வடக்கிலிருந்து ஒலித்தது. அதேபோன்று ஏன் 26 வருடகால யுத்தம் நாட்டில் ஏற்பட்டது? என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். அது தொடர்பில் ஆராய வேண்டும். 

அத்தோடு ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒற்றையாட்சிக்குள் நாம் தீர்வு காண வேண்டும். அதற்காக நாம் இன, மத, குல, அரசியல் பேதங்களுக்கு அப்பாற்பட்டு தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்த வேண்டும். 

இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் ஆரம்பகட்டமாக இலங்கையிலிருந்து கடலுணவுப் பொருட்களை ஐரோப்ப நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை ஐரோப்பிய ஒன்றியம் தடைச் செய்தது. அதேபோன்று ஆடை தொழிற்துறைக்கு வழங்கப்பட்டிருந்த ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையும் தடை செய்யப்பட்டது. இவையெல்லாம் இலங்கைக்கு எதிரான பொருளாதார தடையினை விதிப்பதற்கு முன்னேற்பாடுகளாக மேற்க்கொள்ளப்பட்டது. 

ஆனால் இன்று எமது முயற்சியினால் ஐரோப்பிய ஒன்றியம் தனது தடையினை நீக்கியுள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு 12.00 மணிக்குஅரசாங்கத்தால் வெளியிடப்படவுள்ளது. அதேவேளை இன்னும் இரண்டொரு வாரங்களில் தடைவிதிக்கப்பட்ட ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையும் மீண்டும் எமக்கு கிடைக்கவுள்ளது. 

அத்தோடு உலக நாடுகள் பேதமில்லாமல் இன்று எமது அபிவிருத்திக்கு உதவி புரிய முன்வந்துள்ளன. இது எமது அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும். 

 இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜீ.7 பொருளாதார மாநாட்டிற்கு கலந்து கொள்வதற்கான அழைப்பு இலங்கை ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டிருந்தது. இது எமக்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பமாகும். இதன்மூலம் எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு மேலும் உதவிகள் கிடைக்கும் சந்தர்ப்பமாக அமையும். 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதில் எந்த சவால்கள் வந்தாலும் நான் அஞ்சப் போவதில்லை. அதற்கான அடித்தளம் இன்று காலி மே தினத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08