(எஸ்.வினோத்)
அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட பொருட்கள் சேவைகள் மீதான பெறுமதி சேர் வரியான வற் வரி நாளை இரண்டாம் திகதி திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
அதன் பிரகாரம் இது வரைக்காலமும் அறவிடப்பட்டு வந்த 11 சதவீதமான பெறுமதி சேர் வரி நாளை முதல் 15 சதவீதமாக நடைமுறைப்படுத்தப்படும் என்று நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இதுவரை பெறுமதி சேர் வரிக்கு உள்ளடக்கப்படாத மின்சார கட்டணத்திற்கு எதிர்வரும் காலத்திலும் இவ்வரி உள்ளடக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தேசத்தை கட்டியெழுப்புதலுக்கான வரியில் மின் கட்டணம் நாளை முதல் உட்படுத்தப்படவுள்ளது.
அத்தோடு இது வரைக்காலமும் வற்வரி விலக்களிக்கப்பட்டிருந்த தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்கள், தொடர்பாடல் சாதனம் அல்லது இயந்திரங்கள் , உயர் தொழில்நுட்ப சாதனங்கள் சார் தொடர்பாடல் துறைக்கும் சுகாதார சேவை ,நீர்கட்டணம் மற்றும் தொலைத்தொடர்பு கட்டணம் ஆகியவற்றிற்கும் குறித்த வற் வரி அதிகரிப்பு தாக்கம் செலுத்தும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மருந்து பொருட்களுக்கு வற்வரி அறிவீடு மேற்கொள்ளப்படாத நிலையில் தனியார் துறை சுகாதார சேவைக்கு வற் வரி சீர்த்திருத்தம் தாக்கம் செலுத்தும் என நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வற் வரி அதிகரிப்பானது எவ்வகையிலும் சாதாரண பொது மக்களுக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
நல்லாட்சி அரசாங்கத்தின் வேலைத் திட்டமானது பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்கும் நோக்கத்தை கொண்டதாகவே அமைந்துள்ளது.
எனினும் சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் நிலை மற்றும் இலங்கை தற்போது முகம் கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடி என்பவற்றை கருத்தில் கொண் டே இந்த வற் வரி சீர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் சாதாரண மக்களுக்கு பாதிப்பபை ஏற்படுத்தும் எந்த செயற்பாட்டுக்கும் அரசாங்கம் அனுமதி வழங்காது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM