லிபியாவின் தலைநகர் திரிபோலியில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் 42 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதோடு, 125க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்தனர்.
லிபியாவில் ஆட்சியில் இருந்த சர்வாதிகாரி கடாபி, கடந்த 2011ஆம் ஆண்டு கொல்லப்பட்டதிலிருந்து உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு ஆயுதக் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த குழுவினர், சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுப் படைகளுடன் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசுப் படை வசம் உள்ள தலைநகர் திரிபோலியை கைப்பற்றுவதற்காக கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். குறித்த தாக்குதலில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 2 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஊரைவிட்டு வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில், லிபியாவின் தலைநகர் திரிபோலியில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் 42 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதோடு, 125க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM