மெக்சிகோவில் மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் பெண் பத்திரிகையாளரான நோர்மா சராபியா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மெக்சிகோவில் டபாஸ்கோ மாகாணம் ஹூய்மாங்குயில்லோ நகரை சேர்ந்த இளம் பெண்ணான நோர்மா சராபியா அந்த மாகாணத்தின் பிரபல பத்திரிகையில் நிருபராக பணியாற்றி வந்தார்.
ஹூய்மாங்குயில்லோ நகரில் நடைபெறும் கொலை, ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் குறித்தும், அதற்கு காரணமானவர்கள் குறித்தும் பத்திரிகையில் துணிச்சலாக எழுதிவந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நோர்மா சராபியா வீட்டுக்கு, வந்த 2 இனந்தெரியாத நபர்கள் கதவை தட்டினர். நோர்மா சராபியா கதவை திறந்ததும் குறித்த இனந்தெரியாத நபர்கள் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுள்ளனர்.
பத்திரிகையாளரான நோர்மா சராபியா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அவரை கொலை செய்த நபர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து மெக்சிக்கோ பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
உலகிலேயே மெக்சிகோவில் தான், பத்திரிகையாளர்கள் அதிக அளவில் கொல்லப்படுகிறார்கள் என தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 6 மாதங்களில் மட்டும் 6 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், 2000 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 100 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM