(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரகசியமாக முன்னெடுக்கும் அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி பொதுவேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ களமிறக்கப்படுவார் என்பதை ஜனாதிபதியின் செயற்பாடுகளின் ஊடாக அறிந்துக் கொள்ளலாம் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன எச்சந்தர்ப்பத்திலும் சுதந்திர கட்சியுடன் பரந்துப்பட்ட கூட்டணி அமைக்காது மாறாக எதிரணியின் பங்காளி கட்சிகளுடன் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பினருக்கு தான் ஆதரவு வழங்கபோவதில்லை, தானும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட போவதும் இல்லை ஆனால் ஐக்கிய தேசிய கட்சி பிரதமர் ரணிலை தவிர்த்து பிறிதொருவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கினால் ஆதரவு வழங்குவேன் என்று ஜனாதிபதி கடந்த அமைச்சரவை கூட்டத்தில் தெளிவுற குறிப்பிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் தற்போதைய அரசியல் போக்கினை அடிப்படையாகக் கொண்டு சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் பரந்துப்பட்ட கூட்டணியமைக்கப்படாது. எதிரணியின் பங்காளி கட்சிகளுடன் ஒன்றினைந்து பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிடும். முரண்பாடுகளுடன் கூட்டணியமைத்தால் அவை அரசியல் ரீதியில் பல தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM