இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் முன்னர் சீனாவுக்கான இந்திய தூதுவராக பதவியிலிருந்தபோது பெய்ஜிங்கில் அவருடன் நெருக்கமாக பணியாற்றிய சிரேஷ்ட இராஜதந்திரி சுன் வீய்டொங்கை புதுடில்லிக்கான புதிய தூதுவராக சீன அரசாங்கம் நியமித்துள்ளது. அவரது நியமனம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெறும் சங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கும் மாநாட்டு நிகழ்ச்சி நிரலுக்கு புறம்பாக சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்துகின்ற வேளையில் இந்த தூதுவர் நியமனம் இடம்பெற்றுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
சுன் வீய்டொங் ஏற்கனவே பாகிஸ்தானில் தூதுவராகப் பணியாற்றியதோடு தெற்காசிய விவகாரங்களில் மிகுந்த நிபுணத்துவம் வாய்ந்தவர். இவர் தற்போது சீன வெளியுறவு அமைச்சின் கொள்கை, திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றுகிறார்.
இந்நிலையில் புதுடில்லிக்கான புதிய தூதுவராக நியமனம் பெற்றுள்ளதையிட்டு சீனாவுக்கான தற்போதைய இந்திய தூதுவர் விக்ரம் மிஸ்ரி சுன்னுக்கு வாழ்த்துச் செய்தியை டுட்டர் மூலம் தெரிவித்திருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM