(ஆர்.விதுஷா)
சுகாதார அமைச்சில் இடம் பெறுகின்ற ஊழல் மோசடிகள் , முறைகேடுகளுக்கு சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன பொறுப்பு என்று தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வரும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அவரின் குடியுரிமையைப்பறிக்கக்கோரி நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் நான்கு பிரதான வைத்தியசாலைகளின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, கராப்பிட்டி போதனாவைத்தியசாலை , அநுராதபுரம் போதனாவைத்தியசாலை வவுனியா மாவட்ட வைத்தியசாலை ஆகியவற்றிலே இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றன.
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் கடந்த திங்கட்கிழமையிலிருந்து நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம் பெற்றுகின்றன.
இந்த நிலையில் நான்கு பிரதான வைத்திய சாலைகளுக்கு முன்பாக நேற்று இடம் பெற்ற எதிர்பபு ஆர்ப்பாட்டங்களில் ஒரு அங்கமாக கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு முன்பாக இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் அதிகமான வைத்தியர்கள் கலந்து கொண்டதுடன், பாதாகைகளை ஏந்திய வண்ணமும் கோஷங்களை எழுப்பிய வாறும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
இதன்போது ,புற்றுநோயாளர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கிய சுகாதார அமைச்சரை வீட்டிற்கு அனுப்பு , நெவில் பெர்னாண்டோ வைத்திய சாலை ஊழலை நாட்டிலிருந்து ஒழிக்க வேண்டும் , மருந்துகள் அதிகாரசபையை மருந்துகள் மாபியாவுக்கு வசப்படுத்த வேண்டாம், தரமற்ற மருந்தை கொண்டுவந்த ராஜிதவின் குடியுரிமையை நீக்க வேண்டும் , மருந்துப் பொருள் கொள்வனவு மோசடியை நிறுத்து என்ற கோஷங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய பதாகைகளை ஏற்திய வாறு கோஷங்களையும் எழுப்பினர்.
வைத்தியசாலை வட்டாரத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிசார் கடமைகளில் ஈடுபட்டனர்.இதேவேளை அமைச்சர் ராஜிதவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கிய துண்டுப்பிரசுரங்களும் வைத்தியர்களினால் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டகாரர்கள் மத்தியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித் அளுத்கே கூறியதாவது ,
சுகாதாரத்துறையில் ராஜித சேனாரத்னவினால் பாரிய அளவில் ஊழல் இடம் பெற்றுள்ளது. அவர் சுகாதார அமைச்சுக்கு மட்டுமல்ல நாட்டு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆகவே அவரின் குடியுரிமையை நீக்க வேண்டும்.
கர்பிணித்தாய்மாருக்கு கொடுக்கும் மருந்து பொருட்களில் தரமற்ற காலாவதியான மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்தமையின் ஊடாக தாய்மாரினதும் குழந்தைகளினதும் உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படத்தியுள்ளார்.
இதே போல் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளதாக ராஜித சேனாரத்ன கூறிக்கொண்ட போதிலும் , இதுவரையிலும் அந்த வைத்திய சாலை தனியார் வைத்தியசாலையாகவே இயங்குகின்றது. அந்த வைத்தியசாலைக்காக 500 கோடி ரூபாய் வரையிலான மக்களின் பணம் அநாவசியமாக தனியார் வைத்தியசாலைக்கு செலவிடப்பட்டுள்ளது.
ராஜிதவிற்கு எதிராக மக்களின் சார்பான நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டு வருவதற்காக அனைத்து பாகங்களிலுமுள்ள 5 இலட்சம் வரையிலான பொது மக்களின் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கைகளையம் களுத்துறையிலிருந்து ஆரம்பிக்கவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM