(ஆர்.விதுஷா)
சட்டவிரோதமாக பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பயன்படத்தப்படுகின்ற சட்டம் ஏற்பாடுகள் ஒட்டுமொத்த சமபாலின சமூகத்தவர்களின் வாழ்க்கையை பாதிக்கின்றது. ஆயினும் ஏனைய நாடுகள் சமபாலினத்தவர்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் வழங்குகின்றன.
இலங்கையில் இவர்கள் மீது திணிக்கப்படும் சட்ட ஏற்பாடுகள் திருத்தப்படவேண்டியவையாகும். எனவே எதிர்காலத்தில் சமபாலின சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய தெளிவான சட்ட விதிகள் உருவாக்கப்படவேண்டும் என்றும் , சமூகங்கள் மத்தியில் அவர்களுக்கு அங்கீகாரத்தை வழங்குவதற்கான திட்டங்களை ஏற்படுத்தி கொடுக்கவேண்டியது அவசியம் என ஈக்குவல் கிரௌண்ட் அமைப்பு கோருகிறது.
சமபாலின சமூகத்தவரை ஒன்றிணைக்கும் வகையில் ஆண்டு தோறும் உலகளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றுவருகின்ற நிலையில் ஈக்குவல் கிரௌண்ட் அமைப்பின் 15 ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு “ நாம் ஒரு குடும்பம் “ என்னும் தொனிப்பொருளில் இலங்கையிலும் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன.
அந்த நிகழ்வுகளின் ஒரு அங்கமாக ஊடக மாநாடொன்று நேற்று புதன்கிழமை கொழும்பு ரேணூகா ஹேட்டலில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஈக்குவல் கிரௌண்ட் அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் ரோஸான ப்லேமர் கல்தேரா , திட்டமிடல் அதிகாரி மது ரூபசின்ஹ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டதுடன், சமபாலினத்தவர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அந்த சமூகத்தவருடன் தொடர்புடைய செய்தி அறிக்கையிடலின் போது கையாள வேண்டிய நெறிமுறைகள் தொடர்பில் தெளிவு படுத்தல்களை வழங்கினர்.
ஈக்குவல் கிரௌண்ட் அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் ரோஸான ப்லேமர் கல்தேரா கூறுகையில் ,
இலங்கையை பொறுத்த வரையில் சமபாலினத்தவர்கள் பாரிய சவால்களை எதிர்கொள்ள நேரிடுகின்றது. பாலியல் நாட்டம் என்பது ஒரே பாலினத்தவர் மீது அல்லது எதிர் பாலினத்தின் மற்றொரு நபர் மீது உடல் உளவியல் மற்றும் காதல் ஈர்ப்பினை கொண்டிருப்பதை குறிக்கும்.
சமபாலினத்தவர்களின் திருமணத்திற்கு சுமார் 23 நாடுகள் வரையில் அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் சமபாலினத்தவரை ஒன்றிணைக்கும் வரையிலான நிகழ்வுகள் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இலங்கையிலும் “ நாம் ஒரு குடும்பம் “ என்னும் தொனிப்பொருளில் கடந்த 10ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 23ஆம் திகதி வரை பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்று வரகின்றன.
அதற்கமைய இலங்கையில் எமது நிறுவனம் சமபாலினத்வருடன் கைகோர்த்து உதவிய நலன்விரும்பிகள் , வணிகர்கள் ஆகியோரை கௌரவிக்கும் வகையில் “சமத்துவத்திற்கான போராளிகள் “ என்னும் விருது வழங்கல் விழாவுடன் கொழும்பின் பெருமை என்னும் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.
அவற்றில் அபிமானி திரைப்படவிழாவும் ஒன்றாகும். இது தெற்காசியாவிலும் எமது நாட்டிலும் மிகவும் பழமை வாய்ந்த விழாவாகும் . இந்த திரைப்படவிழாவானது இலங்கையின் திரைப்பட வெளியீட்டு சங்கத்தின் அனுமதியை பெற்றிருப்பது சிறப்பம்சமாகும்.இத்தகைய சிறப்பு மிக்க அபிமானி திரைப்பட விழா லக்ஷ்மன் கதிகாமர் கற்கை நிலையத்தில் இடம் பெறவுள்ளது.
இதன் ஏனைய நிகழ்வுகளாக ஓரினச்சேர்கையாளர்களின் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் நண்பர்களின் ஒன்றுகூடல் மற்றும் ஊடக மாநாடு என்பன அமைகின்றன.
திட்டமிடல் அதிகாரி மது ரூபசின்ஹ கூறுகையில் ,
சமபாலினத்தவர்களுடைய உரிமைகளை பாதுகாப்பது முக்கியமானதொரு விடயமாகும். அந்தவகையில் , சமபாலின நாட்டமென்பது ஒருவகை உணர்வாகும். இத்தகைய உணர்வு எதிர் பாலினத்தவர் மீதோ, ஓரேபாலினத்தவரின் மீதோ ஏற்படலாம்.
ஆகவே , இவ்வாறான ஓரினச்சேர்கையாளர்களை புறந்தள்ளும் எண்ணத்தை விடுத்து அவர்களையும் சமூகத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ளவேண்டியது அவசியமாகும். ஆண் , பெண் இருபாலாரும் சமனானவர்கள் என கூறிக்கொண்ட போதிலும் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருந்த வண்ணமே உள்ளது.
அத்துடன், சமபாலினத்தவர் மீது ஏற்படும் நாட்டமென்பது ஹோமோன் மாற்றங்களினால் ஏற்படுத்தப்படுவதாகும் . இந்த நிலையில் ஒரு ஆண் பெண்காக தன்னை அடையாளப்படுதத்திக்கொள்ள விரும்புவதுடன் , சில சமயங்களில் பெண் தன்னை ஆணாக அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகின்றனர்.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 19வீதமானவர்கள் தாம் எந்த பாலினத்தவர் என்று அறியாத நிலையில் உள்ளனர். ஏனெனில் அவர்கள் சமபாலினத்தவர்களாகவிருப்பின் அவர்களை சமூகம் ஏற்றுக்கொள்ளாது என்ற அச்சத்தில் வெளிவராது முடங்கியுள்ளனர்.
சட்டம்
ஓரினச்சேர்கை எமது சட்டதிட்டங்களுக்கு அமைய அங்கீகரிக்கப்படவில்லை. ஆகவே , இத்தகைய செயலில் ஈடுபடுதல் என்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அதற்கமைய 1833ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட தண்டனை சட்டக்கோவையின் பிரிவு 365 மற்றும் 364(அ) பிரிவுகளின் படி ஓரினச்சேர்கை தண்டனைக்குரிய குற்றமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
தண்டனை சட்டக் கோவையில் உள்ள இந்த பிரிவுகளில் ஒழுங்காக விளக்கம் பெறாமல் காணப்படுவதால் ஓரினச்சேர்கையாளர்களை பொலிசார் எவ்வித தடையுமின்றி கைது செய்யவும் , தடுத்து வைக்கவும் இயலுமாகவுள்ளது. இவ்வாறாக கைது செய்யப்படுபர்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக நேரிடுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM