தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிக்காக குரல்கொடுக்க வேண்டும் -  எச்.எம்.எம்.ஹரீஸ் 

Published By: R. Kalaichelvan

13 Jun, 2019 | 07:14 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் முஸ்லிம் சமூகத்தின் குறைகளை மாத்திரம் விமர்சித்துக்கொண்டிருக்காமல் முஸ்லிம்களுக்கு  எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிக்காகவும் குரல்கொடுக்க முன்வரவேண்டும். 

இனங்களுக்கிடையில் பரஸ்பர நல்லுறவு இருந்தால்தான் நாட்டின் பொருளாதாரதத்தை கட்டியெழுப்பலாம் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் தென்னிலங்கை அரசியல் தலைமைகள் முஸ்லிம்கள் தொடர்பாக கடைப்பிடித்துவரும் நடவடிக்கைதொடர்பில் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் தென்னிலங்கை அரசியல் தலைமைகளின் பேச்சுக்கள் முஸ்லிம் மக்களுக்கு அறிவுரை செய்வதிலும் அவர்களின் கலாசாரம் மற்றும் ஆடைகள் தொடர்பாக விமர்சிப்பதிலுமே இருக்கின்றன. 

ஆனால் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் கெடுபிடிகள் தொடர்பாக குரல்கொடுப்பதை மிகவும் குறைவாகவே பார்க்கின்றோம். அது மிகவும் துர்ப்பாக்கியமான நிலையாகும்.

ஏப்பரல் 21ஆம் திகதிக்கு முன்னர் ஞானசார தேரர் போன்றவர்களின் நடவடிக்கைகளை எதிர்த்து குரல்கொடுக்கும் தலைமைகள் தெற்கில் இருந்தனர். 

பாராளுமன்ற உறுப்பினர் திலான் பெரேரா போன்றவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளை தட்டிப்பேசக்கூடியவர்களாக இருந்தார்கள். ஆனால் இப்போது இவர்களும் முஸ்லிம்களின் செயற்பாடுகள் நடை உடைகளில் குறைகாண்பதிலே இருக்கின்றனர்.

 இது முஸ்லிம் சமூகத்துக்கு ஒருவகையில மன அழுத்தத்தை கொடுக்கும் வகையிலே இருக்கின்றது என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32