அடிப்படைவாத மதத் தீவிரவாத குழுவொன்றின் உறுப்பினர்களது மூளையை ஊடுகாட்டும் (ஸ்கான்) பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவர்களிடம் பகுத்தறியும் ஆற்றல் குறைவாகக் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளதாக புதிய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
ஸ்பெயின் பார்சிலோனா நகரில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்போது பாகிஸ்தானைச் சேர்ந்த அடிப்படைவாதக் குழுவான லஷ்கார் ஈ தலிபாவைச் சேர்ந்த 146 உறுப்பினர்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர்.
அந்த உறுப்பினர்களிடம் அவர்களால் தமது கொள்கைக்காக போராடவும் மரணமடையவும் விரும்புவதற்கு எவ்வாறு முடிகிறது என வினவப்பட்டது. இந்த செயற்கிரமத்தின் போது அவர்கள் எவ்வாறு பதிலளிக்கிறார்கள் என்பதைக் கண்டறிய அவர்களது மூளை ஊடுகாட்டும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.
இதன்போது அவர்களது மூளையின் செயற்பாடுகள் குறைவாக இருப்பது அவதானிக்கப்பட்டது.
மத அடிப்படைவாத கொள்கையை பின்பற்றுபவர்களின் மூளையானது ஒரு செயற்கிரமத்திலுள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை விவாதத்திற்கு உட்படுத்துவதை இயல்பாக எதிர்த்து நிற்பதால் அவர்கள் தமது செயற்பாடுகள் தொடர்பில் பகுத்தறிய துணிவதில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்கள் பொதுமக்களுக்கு எதிராக வன்முறைகளை மேற்கொள்வதிலும் தீவிரவாத குழுவொன்றுடன் இணைந்து செயற்படுவதிலும் வன்முறை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதிலும் தமக்குள்ள விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.
மேற்படி ஆய்வில் பங்கேற்ற மிக்சிக்கன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளரான ஸ்கொட் அட்ரன் தெரிவிக்கையில்இ எந்தவொரு நபரும் தான் எந்த மதத்தைச் சேர்ந்தவராயினும் தனது சொந்த மத நம்பிக்கை அடிப்படையிலான தெரிவுகளை மேற்கொள்ளும்போது அவரது மூளையின் பாகங்களின் செயற்பாடுகள் குறைவாகவுள்ளதை தாம் ஊடு காட்டும் பரிசோதனைகளின் போது கண்டறிந்ததாக கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM