குறுகிய அரசியல் இலாபத்தை அடையும் எண்ணத்துடன் மே தினத்தை கொண்டாடாமல், இலங்கையில் உள்ள உழைக்கும் சமூகத்தின் சாதனைகளை மதிப்பதன் மூலம், அவர்களது முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு மேதினத்தை அனுஷ்டிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் மிக தாழ்மையாகக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மேதினத்தையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அந்தச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
சர்வதேச தொழிலாளர் தினமானது தொழிலாளர்களினது கெளரவத்தையும் அவர்களது சாதனைகளையும் கொண்டாடும் தினமாக மட்டுமல்லாது தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்காக அவர்கள் முன்னெடுத்த போராட்டங்களையும் நினைவுகூறும் ஒரு தினமாகும்.
இந்நாளில் எமது நாட்டின் வளர்ச்சிக்காகவும் நலன்களுக்காகவும் அயராது உழைக்கும் நமது நாட்டின் தொழிலாளர் சமூகத்திற்கு எனது நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இந்த முக்கியமான நாளில் நாட்டை அபிவிருத்தி செய்யும் தங்களது பணிகளிலே ஒற்றுமையோடு செயற்படுமாறு அழைப்பு விடுப்பதோடு சமூகங்கள் மத்தியில் தேசிய ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் தங்களுக்கு இருக்கும் பொறுப்பினை உணர்ந்தவர்களாக பணியாற்றுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இத்தருணத்தில் தொழிலாளர் சமூகத்தின் கெளரவத்தையும் சுயமரியாதையையும் பாதுகாக்க சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதோடு அவர்களது நல்வாழ்வை உறுதி செய்ய தேவையான கருமங்களையும் முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM