கிளிநொச்சியிலுள்ள காணிகள் அரசாங்கத்திற்கோ அல்லது இராணுவத்திற்கோ சொந்தமானவையல்ல. அவை மக்களின் காணிகளாகும். யுத்தம் நடைபெற்ற கால த்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அக்காணிகளை இராணுவம் சுவீகரித்தது. தற்போதைய அமைதியான நிலை யில் அந்த காணிகளை மக்களிடம் கையளிக்க வேண்டும். எனவே இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அவற்றை மக்களி டம் கையளிப்போம். எதிர்க்கட்சித் தலை வர் இரா.சம்பந்தன் அந்தக் காணிகளை பார்வையிடத் தான் சென்றார். எனவே அவர் இராணுவ முகாமிற்குள் பலவந்த மாக நுழையவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத் தின் 20ஆவது வருட பூர்த்தி விழா நேற்
றுக் காலை விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற் றது. அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர்
இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கடந்த காலங்களில் நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதற்காக இந்த அமைப்பு பாரிய
அர்ப்பணிப்புகளை மேற்கொண்டுள்ளது. தமிழ், சிங்கள, முஸ்லிம் என சகல சமூகத்தினரும் இணைந்து நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்தினர். அச்சத்தைப் போக்கினர், அடிப்படைவாதத்தை நீக்கினர். நாட்டில் வாழும் எவரும் அடிப்படைவாதத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அடிப்படை வாத்தினால் ஏனைய நாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டுள்ளோம். எனவே, சிங்கள பௌத்த அடிப்படைவாதமாக இருக்கலாம், தமிழ் அடிப்படைவாதமாக இருக்கலாம், முஸ்லிம் அடிப்படையவாதமாக இருக்கலாம், கிறிஸ்தவ அடிப்படைவாதமாக இருக்கலாம்.அதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
எனவே, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றுபட வேண்டும். இன்று ஏற்பட்டுள்ள ஜனநாயக நிலையினை உறுத்திப்படுத்த வேண்டியுள்ளது. அவ்விடயத்தில் ஊடகங்களுக்குப் பாரிய பொறுப்புள்ளது. ஊடகவியலாளர்கள் அந்தப் பொறுப்பை உணர்ந்து செயற்படுவீர்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்.
எனினும் இந்தப் பயணத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைவதும் ஊடகங்கள்தான். ஊடங்களின் அண்மைக்கால செயற்பாடுகள் ஜனநாயக ரீதியிலான எதிர்கால நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்ததலாக அமைவதையும் காணக்கூடியதாக உள்ளது. கடந்த சில தினங்களாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கிளிநொச்சியிலுள்ள இராணுவ முகாமிற்குள் பலவந்தமாக நுழைந்ததாக செய்திகள் வந்த வண்ணமுள்ளன. அவ்விவகாரத்தை பெரிதாக்கி பிரச்சினையாக்க சிலர் முயற்சிக்கின்றனர்.
குறித்த சம்பவத்தின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் என்னோடு தொடர்பு கொண்டார். அப்போது என்னை சந்திக்குமாறு அவரிடம் வேண்டுகோள் விடுத்தேன். அதற்கிணங்க அவர் என்னைச் சந்தித்தார். 'நீங்கள் இராணுவத்தில் இணைய விரும்புகிறீர்களா? அவ்வாறெனில் இராணுவத்திலுள்ள உயர் பதவி வழங்குவதாகக் குறிப்பிட்டேன். அவ்வாறு இராணுவத்தில் இணைவதற்கான விருப்பம் இல்லையென்றால் ஏன் கிளிநொச்சியிலுள்ள இராணுவ முகாமிற்குச் செல்ல வேண்டும் என வினவினேன்.
'தான் கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றுக்குச் சென்றபோதே குறித்த சம்பவம் நடைபெற்றது. இராணுவம் சுவீகரித்துள்ள காணி மக்களுக்குரியது. அந்தக் காணி தம்மிடம் மீளக் கையளிக்கப்படுமா என்ற சந்தேகத்தில் மக்கள் உள்ளனர். அது தொடர்பில் அவர்கள் வேதனையுடன் உள்ளனர். அதனால்தான் அங்கு சென்று அந்த காணியினை பார்வையிட்டேன்” என அவர் என்னிடம் குறிப்பிட்டார்.
மேலும் அந்த சம்பவம் தொடர்பில் இராணுவத் தளபதியிடமும் விசாரித்தேன். 'எதிர்க்கட்சித் தலைவர் இராணுவ முகாம் அமைந்துள்ள பக்கம் செல்லாது காணி உள்ள பக்கம் சென்றதாகவே அவர் தெரிவித்தார். அங்கு சென்று பார்வையிடுவதில் பிரச்சினையில்லை. எனினும் செல்வதற்கு முன்னர் எமக்கு அறிவித்திருந்திருக்கலாம்' என அவர் குறிப்பிட்டார்.
ஆனால் இன்று சில தரப்பினர் எதிர்க்கட்சித் தலைவர் நாட்டைப் பிரிப்பதற்கு முயற்சிப்பதாகக் குறிப்பிடுகின்றனர். அவ்வாறில்லை, நாட்டைப் பிரிப்பதால் அவருக்கு எவ்வித பயனும் இல்லை. ஏனெனில் அவர் இருப்பது திருகோணமலையில். நாட்டைப் பிரித்தாலும் அவர் எமது பிரதேசத்திற்குள் வந்து விடுவார்.
எனவே, இராணுவ முகாமிற்குள் சென்ற விடயத்தை வேறு விதமாக பெரிதுபடுத்த சிலர் முனைகின்றனர். இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர். எனவே அது தொடர்பில் அவரிடம் பாராளுமன்றிலேயே கேள்வி எழுப்பலாம். பாராளுமன்றம் நடைபெறாததனால்தான் நான் அவரிடம் அது தொடர்பில் கதைத்தேன். மேலும் பாராளுமன்றம் நடைபெறும்போது அது தொடர்பில் கேள்வி எழுப்பலாம்.
மேலும் கிளிநொச்சியிலுள்ள காணி அரசாங்கத்திற்கோ அல்லது இராணுவத்திற்கோ சொந்தமானதல்ல. அது மக்களின் காணியாகும். யுத்தம் நடைபெற்ற காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அக்காணிகளை இராணுவம் சுவீகரித்தது. தற்போதைய அமைதியான நிலையில் அந்தக் காணிகளை மக்களிடம் கையளிக்க வேண்டும். எனவே இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அவற்றை மக்களிடம் கையளிப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM