உலக தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்ப டும் ஊர்வலங்கள் மற்றும் மேதினக் கூட்டங்கள் காரணமாக கொழும்பு நகரின் வீதிகள் சில மூடப்படவுள்ளதுடன் சில வீதிகள் ஊடான வாகனப் போக்குவரத்தை மட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் தலைமைய கம் விடுத்துள்ள அறிக்கையிலே யே இவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது. அவ்வறிக்கை யில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மாளிகாவத்தை பிரதேசத்தில், பிரதீபா மாவத்தை, ஜும்ஆ மஸ்ஜித் சந்தியிலிருந்து சங்கராஜ சுற்றுவட்டம் வரையான வீதிகளும் அதேபோன்று பிற்பகல் ஒரு மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் தெமட்டகொடை சந்தியிலிருந்து பொரளை சந்தி வரையான வீதியும் நாராஹேன்பிட்டி சந்தியிலிருந்து ஹைலெவல் வீதி வரையான பகுதியும் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இன்று பிற்பகல் 2 மணிமுதல் மாலை 6 மணிவரை ஹைலெவல் வீதி யின்
ஸ்டெஃபர்ட் வீதி சமிக்ஞை விளக்குக்கு அருகிலிருந்து ஹெவ்லொக் வீதி, டிக்மன் வீதியின் வீதி சமிக்ஞை விளக்கு வரையான பகுதிகளும் மூடப்படவுள்ளன.
இன்று பகல் 12.30 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரையான காலப்பகுதியில் பார்க் வீதி, பேஸ்லைன் வீதி, கரண வீதி சந்தியிலிருந்து பழைய வீதி, அண்டர்சன் வீடமைப்பு சந்தி வரையிலான பகுதிகளிலும் வீதிகள் மூடப்படவுள்ளன.
இதேவேளை, மேலும் பல வீதிகள் ஊடான வாகனப் போக்குவரத்தை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வழி இலக்கம் 138 இல், புறக்கோட்டை, மஹரகம, கொட்டாவை, ஹோமாகம மற்றும் ஹைலெவல் வீதியின் தூர இடங்களுக்கான சேவையில் ஈடுபடும் பஸ்களுக்காக இன்று நண்பகல் 12 மணிமுதல் மாற்று வீதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் இந்த வாகனங்கள் தும்முல்ல, பௌத்தாலோக்க மாவத்தை, கனத்தை சுற்றுவட்டம், பேஸ்லைன் வீதி, நாராஹேன்பிட்ட, நாவல சந்தி, நுகேகொடை, மற்றும் ஹைலெவல் வீதிகளைப் பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வழி இலக்கம் 120 மற்றும் 125 இல், ஹொரண, கெஸ்பேவ, பிலியந்தலை, இங்கிரிய பகுதிகளுக்கான பஸ்கள், தும்முல்ல, பௌத்தாலோக்க மாவத்தை, டூப்ளிகேஷன் வீதி, காலி வீதி, பெப்பிலியான ஊடாக தெஹிவளையால் பிலியந்தலை வீதிக்குள் பிரவேசிக்க முடியும்.
மேலும்,வழி இலக்கம் 154 இல் போக்குவரத்தில் ஈடுபடும் கிரிபத்கொட – அங்குலான பஸ்கள், களனி பாலம், பண்டாரநாயக்க சுற்றுவட்டம், ஒருகொடவத்த சந்தி, வெல்லம்பிட்டி, கொலன்னாவை வீதி, ஒபேசேகரபுர, கொட்டா வீதி, காசல் வீதி, பௌத்தாலோக்க மாவத்தை, பம்பலப்பிட்டி மற்றும் காலி வீதியை பயன்படுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வழி இலக்கம் 170 மற்றும் 190 இல் பயணிக்கும் பஸ்கள், புறக்கோட்டை, செரமிக் சந்தி, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, காமினி மண்டபம், டி.பி. ஜயா மாவத்தை, இப்பன்வெல, சொய்சா சுற்றுவட்டம், வோட் பிளேஸ், பொரளை சந்தி மற்றும் கொட்டாவ வீதி என்பவற்றை மாற்று வழிகளாக பயன்படுத்த வேண்டுமெனவும் பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM