பாராளுமன்ற தெரிவிக்குழு விவகாரம் தேசிய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் -சுசில் பிரேமஜயந்த  

Published By: R. Kalaichelvan

12 Jun, 2019 | 04:20 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற தெரிவு குழுவின் செயற்பாடுகள்  ஈஸ்டர் குண்டுதாக்குல் தொடர்பில் ஆராயும் நோக்கத்திற்கு  அப்பாற்பட்டு அரசியல் நோக்கங்களை கொண்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இதன்  காரணமாகவே ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் இடையே பாரிய கருத்து வேறுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலைமை தொடருமாயின் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படும். 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில்  இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தற்போது அரசியலில் ஏற்பட்டுள்ள  பிரச்சினைகளுக்கு   பாராளுமன்ற தெரிவு குழுவே  பிரதான காரணியாக உள்ளது.  குண்டு  தாக்குதல் தொடர்பில் ஆராயும் தெரிவு குழுவின் செயற்பாடுகள் அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் உள்நோக்கத்தை கொண்டதாக காணப்படுகின்றது. 

ஜனாதிபதியின் மீதே அனைத்து  குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளமையின்  விளைவால்  நிறைவேற்றுத்துறைக்கும்  சட்டவாக்கத்திற்கும் இடையில் நெருக்கடி  ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதியும் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக    பிரயோகிக்க வேண்டிய  நிலை  ஏற்படும்.

குண்டு தாக்குதலில் பெரும்பாலான தமிழ் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரையில் எவ்விதமான  நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. 

 நிறைவேறாத புதிய அரசியலமைப்பு  உருவாக்கத்திலே கூட்டமைப்பு முழுமையாக தங்கியுள்ளது. அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து  நடவடிக்கைகளும் பயனற்றது. மக்களின் வரிப்பணமே  வீணடிக்கப்பட்டுள்ளது என அவர் இதன் போது தெரிவித்தார்.

நிறைவேற்றுத்துறைக்கும்  சட்டத்துறைக்கும் இடையில்  தற்போது  காணப்படுகின்ற முரன்பாடுகள் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல  இடமளிக்க முடியாது. ஆகவே இவ்விடயம் தொடர்பில்  இவ்வாரம் பொதுஜன பெரமுனவின் முக்கிய தரப்பினர்கள் அரசாங்க தரப்புடன் ஒரு  சந்திப்பினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51