அனுராதபுரம் - திறப்பனை பகுதியில், நேற்று துப்பாக்கி சூட்டு காயங்களுடன் காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மூன்று பேர்களின் தகவல்கள் அறியவந்துள்ளன.
சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் , ஒருவர் மனித கொலை மற்றும் கொள்ளையடித்தல் போன்ற பல குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்த நொச்சியாகமை பிரதேசத்தினைச் சேர்ந்த சரத் பண்டார அல்லது எஸ். எப் பண்டார ஆவார்.
இரண்டாம் நபர், தவறான நடத்தையுடைய நொச்சியாகமை பிரதேசத்தினைச் சேர்ந்த 24 வயதுடைய குமார என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட மூன்றாம் நபர், காலி - ஹிங்தொட பிரதேசத்தினை சேர்ந்த மகுன்த கமகே பிரதீப் குமார எனும் 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்டுள்ள மூவரும் பயணித்த கார் வாடாகைக்கு பெறப்பட்டுள்ளதுடன், அதன் உரிமையாளர் கிலிஒய பிரதேசத்தனைச் சேர்ந்தவர் என அறியவந்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட தகவலுக்கு அமைய குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிடும் போதும் கார் இயங்கிக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கார் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி காணப்பட்டதுடன் காரின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகள் சேதமடைந்து காணப்பட்டதாகவும் குறித்த கார் வடமத்திய மாகணத்தில் பதிவுச்செய்யப்பட்ட கார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM