இலங்கையில், இணையத்தளங்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் சைபர் தாக்குதலை எதிர்க்கொள்ளக் கூடிய தேவையான தொழில் நுட்ப வசதிகள் இருப்பதாக அமைச்சர் அஜித்.பி.பெரேரா தெரிவித்துள்ளார்.
எத்தகைய நேரத்திலும் இடம்பெறக்கூடிய இணையத்தள சைபர் தாக்குதலை எதிர்கொள்வதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகள் இலங்கையில் இருப்பதாக டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித்.பி.பெரேரா தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இலங்கை சேட் நிறுவனம் மற்றும் ஏனைய சில நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்ப பதிலளிப்பு மத்திய நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து நாட்டின் தொழில் நுட்பத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித்.பி.பெரேரா மேலும் தெரிவித்தார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM