முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ9 வீதியூடாகப் பயணிக்கும் பஸ்கள் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்வதில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுவதால் பாடசாலை மாணவர்கள் வீதியில் செல்லும் டிப்பர் வாகனங்களிலும் ஏனைய வாகனங்களிலும் பாடசாலைகளுகுச் செல்கின்ற நிலைமை காணப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பனிக்கன்குளம் கிளவன்குளம், மற்றும் வவுனியா மாவட்டத்தின் கனகராயன்குளம், புளியங்குளம், யானைபூட்டிய குளம், போன்ற பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வதில் தொடர்ந்தும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
அதாவது, காலையில் பாடசாலைகளுக்குச் செல்வற்காக ஏ-9 வீதியில் நீண்டநேரம் காத்திருந்து யாழ்ப்பாணம் வவுனியா செல்லும் பஸ்களை மறிக்கின்ற போதும் பஸ்கள் மாணவர்களை ஏற்றிச்செல்லாததன் காரணமாக மேற்படி கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் வீதியில் செல்லும் டிப்பர் மற்றும் கனரக வாகனங்களை மறித்து அவற்றில் ஏறி பாடசாலைக்குச் செல்கின்ற நிலமை காணப்;படுகின்றது.
மாணவர்களின் போக்குவரத்துத் தொடர்பில் பெற்றோரால் தொடர்ந்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தெரியப்படுத்தியும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM