தென்னாபிரிக்க அணி உலக கிண்ணத்தொடரில் இது வரை சிறப்பாக விளையாடாததற்கு தென்னாபிரிக்க முன்னாள் வீரர் ஏபிடிவிலியர்ஸ் மீண்டும் அணியில் சேர்த்துக்கொள்ளப்படாத சர்ச்சை காரணமல்ல என தெரிவித்துள்ள அணித்தலைவர் டுபிளசிஸ் மாறாக இந்த விவகாரம் அணியை ஐக்கியப்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
டிவிலியர்ஸ் விவகாரம் அணி வீரர்கள் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை இந்த விவகாரம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக கலந்துரையாடலொன்று இடம்பெற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான விவகாரங்கள் அணிக்கு புதிய உத்வேகத்தை வழங்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை டிவிலியர்ஸ் தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு மீண்டும் அணிக்காக விளையாடுவது குறித்த விருப்பத்தினை வெளியிட்டார் எனவும் டு பிளசிஸ் தெரிவித்துள்ளார்.
இது தாமதமான வேண்டுகோள் எனினும் நான் பயிற்றுவிப்பாளருடன் பேசிப்பார்க்கின்றேன் என தெரிவித்தேன் எனவும் தெரிவித்துள்ள டு பிளசிஸ் இது குறித்து நான் அவர்களுடன் பேசியவேளை அவர்களும் இது தாமதமான வேண்டுகோள் என கருத்து வெளியிட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM