தமிழக சட்டமன்ற தேர்தலில் நமக்கு முதல் இடம் உறுதி. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடிக்க இரண்டு திராவிட கட்சிகளிடையேயும் கடும் போட்டி நிலவி வருவதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
இரு கட்சிகளும் தங்களுக்குள் மோதி வருகின்றன. இதற்கிடையில் நமது கூட்டணி முதல் இடத்தை பிடித்து ஆட்சியில் அமரும்.
எதிர்வரும் தேர்தலில் அ.தி.மு.க.-விற்கு மூன்றாவது இடம் கூட கிடைக்காது என தி.மு.க.-வும், தி.மு.க.வுக்கு மூன்றாவது இடத்திற்கான தகுதி கூட இல்லை என அ.தி.மு.க.வும் குறை கூறிவருகின்றனர்.
யார்? இரண்டாவது, மூன்றாவது இடத்தை பிடிக்க போவது என இரு கட்சிகளும் கடுமையாக போட்டி போட்டு கொண்டு வருகின்றனர். இரு திராவிட கட்சிகளும் ஒரே மந்தையை சேர்ந்தவர்கள் தான். கடந்த 50 ஆண்டு கால ஆட்சியில் இரு கட்சிகளும் எதையும் செய்யவில்லை.
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சியையும், மக்கள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இது ஒரு சாதாரண தேர்தல் அல்ல, தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் போர் இதன் முடிவில் தே.மு.தி.க.-மக்கள் நலக்கூட்டணி வெற்றிபெறும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM