தமிழ்நாடு மௌனம் காக்கக் கூடாது - அடைக்கலநாதன்

Published By: Daya

11 Jun, 2019 | 02:35 PM
image

 (நா.தனுஜா)

தமிழ்நாடு மௌனம் காக்குமாக இருந்தால் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொள்வது கடினம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் மக்கள் தமது காணாமல்போன உறவினர்களுக்கு என்ன நேர்ந்தது, அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு தமிழர் பிரச்சினைகளுக்காகப் தொடர்ச்சியாகப் போராடிவரும் நிலையில், பௌத்த தேரர்களின் போராட்டங்கள் மாத்திரம் கருத்திலெடுக்கப்படுகின்றன.

இது எதிர்காலத்திலும் தேரர்கள் அரசியல்சார் விடயங்களில் ஈடுபடலாம் என்ற கருத்தையே வெளிப்படுத்துகின்றது. எனவே அரசியல் தலைவர்கள் தமிழர்கள் பிரச்சினைகள் தொடர்பான தீர்வு விடயத்தில் காலத்தைக் கடத்துகின்றார்கள் என்பதை ஏற்கவேண்டும். தமிழ் மக்களின் போராட்டங்கள் பிசுபிசுத்துப் போகும் நிலையை அடையும் வரை தொடர்ந்து அமைதிகாக்க முடியாது. 

 தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுத்தருவதற்கு இந்தியா உறுதுணையாக இருக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது வலியுறுத்தியிருந்தோம். இந்தியா எமக்கு மிக நெருங்கிய அயல்நாடு என்ற வகையில் இவ்விடயத்தில் உதவவேண்டும். அதுவும் எம்மைக் கைவிடுமாக இருந்தால் இந்தியா ஏமாற்றிவிட்டது என்றுதான் குறிப்பிடவேண்டும்.

 

அதேபோன்று கடந்த காலங்கைப் போலன்றி இந்தியாவின் தமிழகத்தைக் கையாள்வதில் அண்மைக்காலங்களில் ஒரு தொய்வை ஏற்படுத்தி விட்டோம். தமிழ்நாடு மௌனம் காக்குமாக இருந்தால் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொள்வது கடினமான விடயமாகவே அமையும். எனவே இவ்விடயத்தில் தமிழ்நாடு எமக்கு சாதகமாகச் செயற்படக் கூடியதொரு நிலையை உருவாக்க வேண்டும்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53