எந்தவித முன்னறிவிப்புமின்றி தன்னை அணியிலிருந்து நீக்கியதற்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியன் வீரரும், ஆரம்ப துடுப்பாட்டளருமான மொஹமட் ஷாசத் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
உலக கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பிடித்து இருந்த மொஹமட் ஷாசத், அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் விளையாடினார்.
நியூசிலாந்துக்கு எதிராக கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற போட்டியில் விளையாடுவத்றகு முன்பாக உடல் தகுதியுடன் இல்லை என்று அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இடது முழங்காலில் காயம் அடைந்துள்ள அவர் தொடரின் ஏனைய போட்டிகளிலும் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மொஹமட் ஷாசத், விளையாடும் அளவுக்கு நான் உடல் தகுதியுடன் தான் இருக்கிறேன். ஆனால் உடல் தகுதியுடன் இல்லை என்று அறிவித்தது ஏன்? என்பது இன்னும் எனக்கு புரியவில்லை. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் உள்ள சிலர் எனக்கு எதிராக சதிவேலையில் ஈடுபட்டுள்ளனர்.
அணியின் முகாமையாளர், வைத்தியர், தலைவர் ஆகியோருக்கு மட்டுமே எனக்கு பதிலாக இன்னொருவர் பெயர் அறிவிக்கப்படுவது தெரியும். பயிற்சியாளர் பில் சிமோன்ஸ்க்கு கூட பிறகு தான் தெரியும்.
நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்துக்காக பயிற்சியில் ஈடுபட்டு முடிந்த பிறகு தொலைபேசியில் பார்த்த பிறகு தான் முழங்கால் காயம் காரணமாக உலக கோப்பை போட்டியில் இருந்து நான் விலகி விட்டதாக வெளியான செய்தியை பார்த்தேன்.
அணி வீரர்கள் யாருக்கும் தெரியாது. சக வீரர்கள் இந்த செய்தியால் அதிர்ச்சி அடைந்தனர்’ என்று தெரிவித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது குற்றம்சுமாத்தியுள்ளார்.
இது குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செய்தி அதிகாரி கூறியபோது, மொஹமட் ஷாசத் சொல்வது முற்றிலும் தவறானது. அவரது மருத்துவ அறிக்கை ஐ.சி.சி.யிடம் தாக்கல் செய்யப்பட்ட பிறகு மாற்று வீரர் அறிவிக்கப்பட்டார். உடல் தகுதி இல்லாத வீரரை ஆடவைக்க முடியாது. இனிமேல் உலக கோப்பை போட்டியில் விளையாட முடியாதே என்ற விரக்தியில் அவர் பேசுவதாக நினைக்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM