(ஆர்.விதுஷா)
கொழும்பு - புத்தளம் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் விமானப்படை உத்தியோகத்தரொருவர் உயிரிழந்துள்ளார்.
மாரவில - கடுநேரிய பகுதியில் இன்று அதிகாலை 5.45 மணியளவிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக மாரவில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
புத்தளத்திலிருந்து பேலியகொடை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியை முந்தி செல்ல முற்பட்டபோது முச்சக்கர வண்டியுடன் மோதுண்டதையடுத்து எதிர்பாராத விதமாக எதிர் திசையில் பயணித்த லொறியின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் சாரதி மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சிலாபம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய வர்ணகுலசூரிய டிரோன் சேதில் திசர பெர்னாந்து எனப்படும் விமானப்படை உத்தியோகத்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மாரவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்துடன் தொடர்புடைய லொறி மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM