(இராஜதுரை ஹஷான்)
முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியமை தொடர்பில் தவறான கருத்துக்களை முன்னிலைப்படுத்தி அரசியலாக்க வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச். அப்துல் ஹலீம் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை பாதுகாக்கும் நோக்கில் எவரும் பதவிவிலகவில்லை. ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இஸ்லாம் மதத்திற்கு முரணாக தாக்குதலை மேற்கொண்ட அடிப்படைவாதிகளின் மிலேட்சத்தனமான செயற்பாட்டைய வன்மையாக கண்டிக்கின்றோம்.
முஸ்லிம் மக்கள் என்றும் தீவிரவாத்திற்கு துணை செல்லவில்லை. ஒரு தனிமனிதனின் செயற்பாட்டின் காரணமாக ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களும் உடலளவிலும், மனதளவிலும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளார்கள்.
எனவே தேசிய நல்லிணக்கம் மீண்டும் சீர்பட வேண்டும். ஆகவே அரசாங்கமும் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை காண துரிதமாக செயற்படுதல் அவசியம். எமது தரப்பு நியாயத்தை எடுத்து கூறவே நாளை மகாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்தாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM