ஐ.ஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பம் 5 இலங்கையர்களின் கைத்தொலைபேசி இலக்கங்களை இந்தியா வழங்கியுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய சில இந்தியர்களுக்கும் இலங்கையைச் சேர்ந்த இரு குடும்பங்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் பற்றிய விபரங்களையும் பகிர்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.
தேசிய புலனாய்வு முகவர் குழு கடந்த வாரம் இலங்கையில் விசாரணைகளை மேற்கொண்டது. அப்போது அவர்கள், இஸ்லாமிய அரச பயங்கரவாதிகளுடன் (ஐ.எஸ்.ஐ.எஸ்) நேரடி இணைப்புகளைக் கொண்ட பல இலங்கையர்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பு கொண்ட சில இந்தியர்கள் பற்றிய தகவல்களையும் வெளியிட்டுள்ளனர்.
இவர்கள் இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுடன் நேரடியாக தொடர்புடையவர்களா என்பது தெரியவில்லை என இந்திய உள்துறை அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM