முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கான 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று(10) இடம்பெற்றது.
கடந்த 1998ஆம் ஆண்டு இதே தினத்தில் இலங்கை விமானப்படையாலும், இராணுவத்தினாலும் விமானத்தாக்குதல் மற்றும் எறிகணை தாக்குதலில் 33 சிறுவர்கள், மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதன் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வன்னி குரோஸ் நினைவேந்தல் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்த படுகொலை நினைவேந்தலின் பொது சுடரினை படுகொலை தாக்குதலில் தமது குடும்பத்தில் 4பேரை இழந்த தாய் மற்றும் தந்தை சுடரினை ஏற்றிவைத்தனர்.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆண்டியையா புவனேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் பிரேமகாந் ஏனைய பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM