அமெரிக்கா – பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான 250 ஆண்டுகால நட்புறவை கொண்டாடும் வகையில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வொஷிங்டன் நகருக்கு வந்திருந்தார்.
அப்போது இருநாடுகளுக்கு இடையிலான வலிமையான நட்பை நினைவுகூரும் விதமாக வெள்ளை மாளிகையின் தெற்கு பகுதியில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இமானுவேல் மேக்ரான் ஆகியோர் ஒன்றாக இணைந்து ஒரு கருவாலி மரக்கன்றை நட்டனர்.
அமெரிக்கா – பிரான்ஸ் நட்பு மரம்’ Oak of friendship என்று அழைக்கப்பட்ட இந்த மரம் நடுகைவிழா அப்போது உலக ஊடகங்களில் மிக முக்கிய செய்தியாக வெளியானது. இந்நிலையில் இந்த நட்பு மரம் பட்டுப்போய் செத்து விட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு வெள்ளை மாளிகை அதிகாரிகளின் மிதமிஞ்சிய கட்டுப்பாடுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த மரக்கன்றினால் ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை தோட்டத்தில் உள்ள மற்ற செடி வகைகளுக்கு எந்த பாதிப்பும் உண்டாகக் கூடாது என்ற நோக்கத்தில் நட்பு மரத்தின் மீது அதிகாரிகள் சில தெளிப்பான்களை தொடர்ந்து பயன்படுத்தியதால் அந்த மரம் இறந்து விட்டதாக சில செய்திகள் குறிப்பிடுகின்றன. முதலாம் உலகப்போரின்போது பிரான்ஸ் நாட்டில் உயிர்நீத்த அமெரிக்க வீரர்களின் கல்லறை அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 6 அடி உயரம்கொண்ட இந்த கருவாலி மரக்கன்று அமெரிக்காவுக்கு முன்னர் கொண்டு வரப்பட்டது. கடந்த ஆண்டில் இந்த மரக்கன்று நாட்டப்பட்ட ஒரு வாரத்தில் காணாமல் போனதும், பின்னர் மிக உயரிய நினைவுப்பரிசு என்பதால் பாதுகாப்பாக வளர்ப்பதற்காக வேறு இடத்துக்கு ‘நட்பு மரம்’ கொண்டு செல்லப்பட்டதாக வெள்ளை மாளிகை விளக்கமளித்ததும் நினைவிருக்கலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM