பலூன் போல் விரிந்து சுருங்கும் நவீன ஆடைகளை ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் வடிவமைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
'பப்ளி கலெக்ஷன்ஸ்' என்று இது அழைக்கப்படுகின்றது. நோர்வேயை சேர்ந்த பிரட்ரிக் டஜிரண்ட்சென் என்னும் ஆடை வடிவமைப்பாளரே யாருமே இதுவரை யோசிக்காத மற்றும் முயற்சி செய்யாத ஒரு வடிவமைப்பை செயல்படுத்தியிருக்கிறார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
லண்டனில் நடந்த பேஷன் ஷோ ஒன்றில் மிகப்பெரிய பலூன் பந்துகளுக்குள் மொடல்கள் அணிவகுத்து வந்தனர். என்ன இது விசித்திரமான உடையாக உள்ளதே.
இதை எப்படி தெருக்களில் அணிந்து நடக்க முடியும் என பார்வையாளர்கள் விமர்சித்துக் கொண்டே பார்த்துள்ளனர். பின் அடுத்த நொடியிலேயே அந்த பலூன் காற்று வெளியேற்றப்பட்டு அதை அப்படியே ஆடையாக மாற்றிக் கொண்டனர். இவ்வளவு நேரம் காற்றில் மிதந்த பலூன் எப்படி ஆடையானது என அனைவருக்கும் ஆச்சரியம். இதுதான் அவரின் சாதனை. அவரின் கற்பனைக்குக் கிடைத்த வெற்றி.
இந்த ஆடையை முழுக்க முழுக்க இறப்பர் கொண்டு வடிவமைத்துள்ளார். இந்த இறப்பரை இலங்கையிலிருந்து வாங்கியிருப்பதுதான் கூடுதல் சிறப்பு.
“இந்த ஆடைகள் தனித்தனி ஆடைகள் அல்ல. ஒரே, இறப்பரில் செய்யப்பட்ட முழு ஆடை. இந்த ஆடை காற்றின் அழுத்தத்தால் இயங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதை அணிந்திருப்போர் தலை கீழ் பலூனினுள் இருக்கும் காற்றை திறந்து விட்டால் சாதாரண உடையாக மாறிவிடும் என வடிவமைப்பாளர் பிரட்ரிக் டஜிரண்ட்சென் கூறியுள்ளார் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM