மன்னாரில் சமூர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (9) இடம் பெற்ற போது தற்காலிக மின் குமிழ் பொருத்தப்பட்ட கம்பம் சரிந்து வீழ்ந்ததில் மூன்று பேர் படுகாயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சமூர்த்தி பயணாளிகளுக்கான சமூர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்று (9) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் இடம் பெறவிருந்த நிலையில், தவிர்க்க முடியாத நிலையில் மாலை 2.30 மணிக்கு மாற்றப்பட்டது.
இதனால் வருகை தந்த ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருந்தனர்.
இந்த நிலையில் மதியம் 2 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயாகமகே வருகை தர இருந்த நிலையில், தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தேசிய கீதம் நிறைவடைந்து சிறிது நேரத்தில் நிகழ்வு இடம் பெற்றுக் கொண்டிருந்த புதிதாக அமைக்கப்பட்ட மேடையுடன் கூடிய தற்காலிக மண்டபத்தின் மக்கள் அமர்ந்திருந்த பகுதியில் மின் குமிழ் பொருத்தப்பட்ட கம்பம் காற்றின் காரணமாக சரிந்து மக்கள் மீது வீழ்ந்தது.
இதன் போது வயோதிப ஆண் ஒருவரும்,வயோதிப பெண்கள் இருவரும் உள்ளடங்களாக மூன்று பேர் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் கடும் காற்றின் காரணமாக அமைக்கப்பட்ட தற்காலிக மேடையின் மேல் கூறைப்பகுதி உள்ளிட்ட மேற்பகுதிகள் காற்றினால் கடும் சேதமாகியது.
இதையடுத்து மாலை 2.45 மணியளவில் குறித்த நிகழ்வுகள் ஆராம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM