ஆட்சி மாறியது.. காட்சி மாறியதா?

Published By: MD.Lucias

30 Apr, 2016 | 10:40 AM
image

உரி­மையை இழந்தோம்

உட­மையும் இழந்தோம்

உணர்வை இழக்­க­லாமா

உணர்வை கொடுத்து

உயிராய் வளர்த்த

உறவை மறக்­க­லாமா

தோல்வி நிலை­யென நினைத்தால்

மனிதன் வாழ்வை

நினைக்­க­லாமா…

1986 இலே வெளி­யான ஊமை விழிகள் எனும் திரைக்­கா­வி­யத்­திலே கவிஞன் மேற்­கண்­ட­வாறு கவி­பு­னைய அதற்கு உயி­ரோட்­டமும் கொடுக்­கப்­பட்­டி­ருப்­பது அவ்­வப்­போது சந்­தர்ப்­பத்­துக்­கேற்­ற­வாறு மீட்­டிப்­பார்க்கச் செய்­து­வி­டு­கி­றது.

தோட்டத் தொழி­லாளி ஒரு­வனின் முழங்­கா­லுக்கு கீழே இரத்­தத்தை உறிஞ்சிக் குடிக்கும் அட்டை கூட ஆன மட்டும் அதா­வது ஒட்­டு­மொத்­த­மான உடல் முழுதும் இரத்­தத்தை உறி ஞ்சி நிறைத்துக் கொண்டதன் பின்னர் நீங்கி கீழே விழுந்து விடு­கி­றது.

ஆனாலும் தொழிற்­சங்கம் என்ற பெய­ரிலும் சந்தா என்ற போர்­வை­யிலும் தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­க­ளையும் அவர்­க­ளது உடல் முழுதும் உள்ள இரத்­தத்தையும் உறிஞ்சும் துர்­பாக்­கியம் இன்றும் அரங்­கே­றிக்­கொண்டு தானி­ருக்­கி­றது.

இது போதா­மைக்கு மேலே பாட்­டிலே கூறப்­பட்­டுள்­ளது போன்று மலை­ய­கத்­திலே வாழக்­கூ­டிய ஒவ்­வொரு தொழி­லா­ளி­யி­னதும் ஒவ்­வொரு வாக்­கா­ள­னதும் உணர்­வுகளும் இன்று இல்­லாது செய்­யப்­பட்டு வரு­கின்­றது.

உரி­மை­களைக் கேட்­டுப்­பெற முடி­யாத நிலை­யி­ருக்க மலை­ய­கத்தில் உணர்­வு­க­ளையும் சூறை­யா­டு­கின்ற சூட்­சு­ம­மான செயற்­திட்­டங்கள் மிகவும் கச்­சி­த­மாக இடம்­பெற்று வரு­கின்­றன.

இலங்­கை­யிலே தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களின் வர­லாறு 200 ஆண்­டு­களைக் கடந்து நிற்­கின்­றது. உலகத் தொழி­லா­ளர்கள் உரிமை வென்று 60 வரு­டங்கள் கடந்து நிற்­கின்­றன. எனினும் உரி­மைகள், உட­மைகள், உணர்­வுகள் இழக்கச் செய்­யப்­பட்ட சமூ­க­மாக மலை­ய­கத்­திலே தோட்­டத்­தொ­ழி­லா­ளர்கள் இன்றும் இருந்து வரு­கின்­றனர்.

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சாராயப் போத்­தலைக் காட்டிக் காட்­டியே அவர்­க­ளது உரி­மைகள், உட­மைகள், உணர்­வுகள் என அனைத்தும் சின்னா பின்­ன­மாக்­கப்­பட்­டு­விட்­டன. தேர்தல் வந்­தாலோ அல்­லது வருடா வருடம் மே தினம் வந்­தாலோ அங்கு சாரா­யத்­துக்கு மவுசு எகி­றி­வி­டு­கி­றது.

சாராயப் போத்தல் சாமி­யா­கவும் சொல்­லப்­ப­டு­கின்ற கதைகள் வேத­மா­கவும் புலப்­ப­டு­வதால் அங்கு சீர்­கு­லைவு நிலைகொண்­டு­வி­டு­கி­றது.

நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை சர்­வ­தேச தொழி­லாளர் தினம் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது. தொழி­லா­ளர்­களின் சம­கா­லத்து நிலை­மைகள் வெளிப் ­ப­டுத்­தப்­ப­டு­கின்ற நாளா­கவும் முத­லா­ளித்­து­வத்­துக்கும் அதிலும் மேலாக ஆட்சி அதி­கா­ரத்தில் வீற்­றி­ருப்­போ­ருக்கும் செய்­தி­களைக் கூறு­வ­தற்கு உரி­மை­களைப் பெறு­வ­தற்­கான திட­மான கோரிக்­கை­களை வலி­யு­றுத்­தல்­களை முன்­வைப்­ப­தற்­குமே இந்த நாள் அமைந்­தி­ருக்­கின்­றது.

சர்­வ­தேச தொழி­லாளர் தினத்தில் சர்­வ­தே­சத்தில் நடப்­பது என்ன என்று நாம் ஆராய்­வ­தற்கு முன்­ப­தாக நமது மண்­ணிலே அதுவும் மலையகத்திலே என்ன நடக்­கி­றது என்­பதை முதலில் அறிந்­து­கொள்ள வேண்டும்.

குறிப்­பாக மலை­ய­கத்தை எடுத்­துக்­கொண் டால் நாளைய தினத்­துக்­காக அதா­வது சர்­வ ­தேச தொழி­லாளர் தினத்தை அனுஷ்­டிப்­ப­தற் குப் பதி­லாக அதனை கொண்­டா­டு­வ­தற்கும் கூத்­தா­டு­வ­தற்­கு­மாக ஒரு கூத்து விழா­வா­கவே சித்­தி­ரிக்­கப்­பட்டு இது வரை­யிலும் செயற்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது.

உரி­மைகள் பற்றி குரல்­கொ­டுப்­ப­தற்கும் குறை­பா­டுகள் பற்றி எடுத்­து­ரைப்­ப­தற்­கு­மான இந்த உன்­ன­த­மான தினத்தை உதா­சீ­னப்­ப­டுத்தும் வகை­யிலும் தொழி­லா­ளரின் உரி­மை­ களை, உணர்­வு­களை தவி­டு­பொ­டி­யாக்கி இல்­லாது செய்­கின்ற வகை­யி­லு­மான செயற்­பா­டுகள் தற்போது நிறை­வ­டைந்­தி­ருக்­கின்­றன.

மலை­ய­கத்தில் அர­சியல் தொழிற்­சங்க அதி­கார அந்­தஸ்­து­க­ளையும் இருப்­புக்­க­ளையும் வெளிக்­காட்­டு­கின்ற நாளாக இது அமைந்­தி­ருக்­கி­றது.

இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் தனித்து நுவ­ரெ­லி­யா­விலும் மலை­யக மக்கள் முன்­னணி, தொழி­லாளர் தேசிய சங்கம், ஜன­நா­யக மக்கள் முன்­னணி ஆகிய தரப்­புகள் இணைந்த தமிழ் முற்­போக்கு கூட்­டணி தல­வாக்­க­லை­யிலும் மே தினத்தை அனுஷ்­டிப்­ப­தற்­கான தாராள ஏற்­பா­டுகள் அனைத்தும் இறுதி செய்­யப்­பட்­டு­விட்­டன.

இந்த இரு தரப்­புக்­களும் இவ்­வாறு மே தின பகி­ரங்க கூட்­டங்­களை நடத்­து­கின்ற அதே சந்­தர்ப்­பத்தில் மலை­ய­கத்தில் இயங்­கி­வ­ரு­கின்ற சிறு சிறு தொழிற்­சங்­கங்­களும் அர­சியல், அர­சியல் சாரா அமைப்­புக்­களும் இடது சாரி­களும் கூட மே தினத்தை அனுஷ்­டிக்கத் தயா­ரா­கி­யுள்­ளன.

இன்னும் சில தொழிற்­சங்­கங்கள் மே தின த்தை துக்­க­தி­ன­மாக அனுஷ்­டிப்­ப­தற்கும் வேறு சில அமைப்­புகள் கவ­ன­யீர்ப்பு போராட்­டங்­களை நடத்­து­வ­தற்கும் ஆலய வழி­பா­டு­களில் ஈடு­ப­டு­வ­தற்கும் தீர்­மா­னித்­தி­ருக்­கின்­றன.

இங்கு நிலை­யான வித்­தி­யா­சங்கள் காணப்­ப­டு­கின்­றன. சிறு தொழிற்­சங்­கங்கள், அர­சியல், அர­சியல் சாரா சிறு அமைப்­புகள், இடது சாரி அமைப்­புகள் என்ற தரப்­பிலே சர்­வ­தேச தொழி­லாளர் தினம் என்ற உண்­மை­யான உணர்வு வெளிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.

ஆனாலும் மலை­ய­கத்தில் இரு பெரும் அமை ப்­பு­களின் மே தின­மா­னது மேற்­சொன்­ன­வாறு தமது மக்கள் பலத்­தையும் அதி­கார பலத்­தையும் வெளிக்­காட்­டு­வ­தற்கே துணிந்­தி­ருக்­கின்­றன. களத்­திலும் குதித்­தி­ருக்­கின்­றன.

ஆதலால் இங்கு உண்­மை­யான தொழி­லாளர் தினம் பொய்­யாக்­கப்­ப­டு­கி­றது. தொழி­லா­ளரின் உரி­மைக்­குரல் வீண­டிக்­கப்­ப­டு­கி­றது. உணர்­வுகள் நசுக்­கப்­ப­டு­கின்­றன.

அது மாத்­தி­ர­மின்றி அர­சியல் தொழிற்­சங்கத் தலை­மை­க­ளுக்கு மேடை­ய­மைத்து, மாலை அணி­வித்து, பொன்­னாடை போர்த்தி, அழ­கு­பார்க்கும் தொழி­லா­ளியின் மாறா நிலை நிலைத்­தி­ருக்­கவே செய்­கி­றது. இவை அனைத்­தையும் செய­லு­ரு­வாக்கம் செய்­வ­தற்கு சாராயம் பக்க பல­மாக இருக்­கி­றது.

இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களின் போது சாரா­ யத்தின் செல்­வாக்கு செலுத்­த­லா­னது அர­சியல் தொழிற்­சங்க வாதி­க­ளி­டத்­திலும் பக­டை­க­ளா­ கவும் அப்­பா­வி­க­ளா­கவும் இருந்­து­வ­ரு­கின்ற தோட்டத் தொழி­லா­ளர்­க­ளி­டத்­திலும் முரண்­பட்ட கருத்­துக்­களை தோற்­று­வித்­தி­ருக்­கின்­றது.

தேர்­தலோ மேதி­னமோ இந்த முக்­கி­யத்­துவம் மிக்­க­தான இரு சந்­தர்ப்­பங்­களின் போதும் அர­சியல் வாதி­களும் தொழிற்­சங்­கத்­த­லை­மை­களும் அவர்­க­ளது பிர­தா­னி­களும் தொழி­லா­ளர்­களை அணுகி சாரா ­யத்தை மாத்­தி­ரமே பண்­ட­மாற்றுப் பொரு­ளாக வைத்து பேரம் பேசு­வ­தாக தொழி­லா­ளர்கள் தரப்­பி­லி­ருந்து கூறப்­ப­டு­கி­றது.

குறிப்­பிட்ட தொகை அல்­லது எண்­ணிக்­கையில் சாராயப் போத்­தல்­களைப் பெற்­று­த­ரு­வ­தாகக் கூறியே பேரம் பேசப்­ப­டு­வ­தாகக் கூறு­கின்­றனர் தொழி­லா­ளர்கள்.

ஆனால் மறு­பு­றத்தில் தொழிற்­சங்கத் தலை­மைகள் அர­சி­யல்­வா­திகள் மற்றும் பிர­தா­னிகள் எனப்­ப­டுவோர் கூறு­கையில்,

சாரா­யத்தைக் காட்டி எதையும் சாதித்து விடலாம். அந்­த­ளவு சாரா­யத்­துக்கு சக்தி இருக்­கி­றது என்று கூறு­கின்­றனர். அது மாத்­தி­ர­மின்றி தோட்­டங்­களில் இருக்­கின்ற தோட்டக் கமிட்டித் தலை­வர்­களும் இன்னும் சில தரப்­பி­ன­ருமே எம்மைப் போன்­ற­வர்­களை அணுகி சாராயப் போத்­தல்­களின் எண்­ணிக்­கை­யையும் கூறி தங்­க­ளது கணக்கை முடித்துச் செல்­கின்­றனர் என்றும் குறித்த தினத்­திற்கு தாம் சாராயப் போத்­தல்­களை விநி­யோ­கித்து விடு­வ­தா­கவும் கூறு­கின்­றனர்.

இங்கு தோட்டத் தொழி­லா­ளர்கள் கூறு­வது உண்­மையா பொய்யா என்ற சந்­தேகம் வலுப்­ப­தோடு அர­சியல் தொழிற்­சங்கத் தலை­மைகள் அல்­லது பிர­தா­னிகள் கூறு­வது தான் சரியா, தவறா என்ற நிலை­யா­ன­தொரு முடி­வுக்கே வர இய­லாத நிலை தோன்­றி­யுள்­ளது.

எப்­ப­டி­யி­ருப்­பினும் சாராயப் போத்­தலை கரு­வாக வைத்து அல்­லது துரும்புச் சீட்­டாக வைத்து மலை­யகத் தொழி­லா­ளர்­க­ளி­டத்தில் சூதாட்டம் நடத்­தப்­ப­டு­கி­றது. முழுப் ­பூ­ச­ணியை சோற்றில் மறைத்து விடும் அளவில் இங்கு பொய் ஒன்று சோடிக்­கப்­பட்­டி­ருப்­பது புல­னா­கின்­றது.

தோட்டத் தொழி­லா­ளர்­களின் உணர்­வு­களை உதா­சீ­னப்­ப­டுத்தி வரு­கின்ற மலை­யகத் தலை­மைகள் காலத்­துக்கு காலம் சந்­தர்ப்­பத்­துக்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­டு­கின்ற வாக்­கு­று­திகள், உறுதி மொழிகள் கிடப்பில் போடப்­ப­டு­கின்­றன. இல்­லா­விட்டால் காற்றில் பறக்க விடப்­ப­டு­கின்­றன.

ஆசை­காட்டி மோச­மி­ழைத்த கதை­யாக 1000 ரூபா சம்­பள உயர்வு அமைந்­ததைப் போன்று தான் தீபா­வளி முற்­பணம் இல்­லாது போய் தைப் ­பொங்கல் முற்­ப­ண­மாக பேசப்­பட்டு இறு­தியில் ஏமாற்­றமே எஞ்­சி­யது. அது­மட்­டு­மல்­லாது அந்த உறு­தி­மொ­ழிகள் மறக்­க­டிக்­கவும் செய்­யப்­பட்­டு­விட்­டன.

தற்­போது தனியார் ஊழி­ய­ருக்கு விதந்­து­ரைத்த 2500 ரூபா என்ற அடிப்­படைச் சம்­ப­ளத் ­து­ட­னான அதி­க­ரிப்பு தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்கும் கிடைக்கப் பெறு­வ­தா­கவும் அது பாரா­ளு­மன்­றத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்டு விட்­ட­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

அந்தத் தொகை கையில் கிடைத்தால் மட்­டுமே மகிழ்ச்சி. எனினும் அதன் சாத்­தியக் கூற்றுத் தன்­மைகள் கேள்­விக்­கு­றி­க­ளுக்குள் பொதிந்து கிடப்­ப­தா­கவும் தோன்­று­கி­றது.

இவ்­வா­றான நிலையில் தான் மலை­ய­கத்தில் சாராயத் தவ­ற­ணை­களை வைத்து தோட்டத் தொழி­லா­ளர்­களை குறி­வைத்து வியா­பாரம் செய்யும் அர­சி­யல்­வா­திகள் தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களின் குறை வரு­மா­னத்தின் மிகு­தி­க­ளை யும் சூறை­யா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.

இன்­றைய நிலையில் மலை­ய­கத்தில் தோட்­டத்­தொ­ழி­லா­ளர்கள் வர்க்­கத்தின் உணர்­வு­க­ளுடன் விளை­யாடும் போக்கு மேம்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. உண்­மை­யான உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­கப்­ப­டு­வது கிடை­யாது.

தொழி­லா­ளி­யா­னவன் மரி­யாதை செலுத்தி நடந்து கொள்­வதை அவ­தா­னிக்கும் அர­சியல் தலை­மைகள் அவர்­களை அடி­மை­க­ளாக நடத்­து­வ­தற்கு முற்­ப­டு­கின்­றன.

இந்­நிலை மாற வேண்டும். நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கென மலை­ய­கமும் கணி­ச­மான பங்­க­ளிப்­பினை பெற்­றுக்­கொ­டுத்­தி­ருக்­கின்­றது என்­பதை மறைக்க முடி­யாது. அந்­த­வ­கையில் ஆட்சி மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டது. ஆட்சி தான் மாறி­யதே தவிர மலை­ய­கத்தில் மக்­களின் அவ­லக்­காட்சிகள் எதுவும் இன்னும் மாறி­ய­தாக இல்லை.

ஆட்சி மாற்­றத்­திற்கு உத­விய மலை­யக சமூ­கத்­துக்கு அர­சாங்கம் உரிய மரி­யா­தையை அல்­லது கைமாறை இன்னும் காட்­ட­வில்லை என்று கூற­மு­டியும். ஒவ்­வொரு மேதி­னத்தின் போதும் தீர்­மானங்கள் நிறை­வேற்­றப்­ப­டு­கின்­ற­னவே தவிர அவை நடை­மு­றை­யோடு எத்­த­கைய சாத்­தி­யத்தை உண்­டு­பண்­ணி­யி­ருக்­கின்­றன அல்லது நடைமுறைத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின் றன என்­பது கேள்வி தான்.

மேதி­னத்தை கரு­வாக வைத்து அர­சியல் மேடை­ய­மைக்கும் தலை­மைகள் குறித்து பின்­னணி தொடர்­பிலும் மலை­ய­க­ச­மூகம் குறிப்­பாக இளைய சமூகம் சிந்­திக்க வேண்டும்.

மலை­யகம் உருப்­ப­ட­வேண்­டு­மானால், முன்­னேற வேண்­டு­மானால், எதிர்­காலம் சிறக்க வேண்­டு­மானால் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்­கான உரிய அந்­தஸ்து, நிலை­யான பொரு­ளா­தாரம் நீடித்து நிலைக்க வேண்­டு­மானால் “நான் யாருக்கும் அடிமை இல்லை” என்ற வாதத்தை மலை­ய­கத்தின் ஒவ்­வொரு மைந்­தனும் நெஞ்­சு­று­தி­யோடு கூற­வேண்­டு­மானால், ஏமாற்­றுக்­கா­ரர்­களை எதிர்த்து நிற்கும் துணிவு பிறக்க வேண்­டு­மானால் இன்­றைய இளைஞர், யுவ­தி­களின் சிந்­த­னையிலும், செயலிலும் மாற்றம் ஏற்­ப­ட­வேண்டும்.

அந்த சிந்­த­னையும் மாற்­றமும் மலை­ய­கத் தில் செய்ய வேண்­டிய முதற்­கா­ரியம் கள்­ளச்­சா­ரா­யத்தை ஒழித்துக் கட்­டு­வ­தாக இருக்­க­வேண் டும்.

மலை­ய­கத்தில் கள்­ளச்­சா­ராயம் ஒழித்­துக்­கட்­டப்­பட வேண்டும் அடுத்­த­தாக சாரா­யக்­க­டை­களை நிரந்­த­ர­மாக மூடு­வ­தற்கு திட்டம் தீட்டி செயற்­பட வேண்டும். புதி­தான அனு­ம­திப்­பத்­தி­ரங்­க­ளுக்கு எதி­ராக நிற்­க­வேண்டும்.

அர­சியல், தொழிற்­சங்­க ­வா­தி­களின் பகட்டு வார்த்­தை­களின் அர்த்­தங்­களை எடுத்­து­ரைக்க வேண்டும். இவ்­வா­றான உறு­தி­மொ­ழி­களே நாளைய மே தினத்தில் இளைஞர் சமு­தாயம் எடுத்­துக்­கொள்­ள­வேண்டும்.

இத்­த­கை­யதோர் பாரிய நீடிய வேலைத்­திட்டம் வெற்றிக் கொடியைக் கட்­ட­வேண்­டு­மானால் ஊருக்கு ஊரும் பிர­தே­சத்­துக்கு பிர­தே­சமும் மாவட்­டத்­துக்கு மாவட்­டமும் மாகா­ணத்­துக்கு மாகா­ணமும் இளைஞர் சமு­தாயம் ஒரு­வ­லைப்­பின்­ன­லு­ட­னான இணைப்­பினை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்த மலையகத்தின் இளைஞர் சமு தாயமும் ஒரே வலையமைப்பின் கீழ் ஒன்றி ணைந்தால் மலையகத்தை மாற்றிய மைக்க முடியும். 200 வருடகால மலையக மக்களின் வரலாறு இன்றைய இளைஞர் சமூகத்தில் மாற்றிய மைக்கப்பட்டது என்று வரலாறு கூறுவதற்கும் அது வழிவகுக்கும்.

எமது மூத்தோரின் காலம் கடந்து நிற்கிறது.

எனவே இன்றைய இளைஞர்கள் நாளைய சமுதாயத்துக்காக ஏதேனும் சாதிக்காவிடின் அது பழிபாவமாக மாறிவிடும். நாளை நமது சமூகம் நம்மை குறை கூறாதிருக்க நாம் சமகாலத்தில் சிந்திக்க வேண்டியது அவசிய மாகிறது. எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதற்கு இன்றைய தலைமைகளும் தலை முறைகளும் நாளைய தலைமைகளுக்கும் தலை முறைகளுக்கும் சிறந்த உதாரணங்களாக இருக்க வேண்டும்.

சமூகத்தின் பாலான உண்மையான மனது டன் மேதினம் என்ற உன்னதமான தினத்தில் குறிப்பாக மலையகத்தின் இளைஞர், யுவதி கள் சிந்தித்து உறுதிமொழியெடுத்து தங்களு க்கு தாங்களே தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிப்பது சிறப்பாகும்.

இளைஞர் வலையமைப்பை கட்டியெழுப்புவ தற்கு இன்றைய நவீன உலகில் பல வழிகள் உள்ளன. இளைஞர் சமுதாயம் ஒன்றிணையும் பட்சத்தில் வழி நடத்துவதற்கு மலையகத்தை நேசிக்கின்ற புத்திஜீவிகள் பலர் இருக்கின்றனர்.

எமது முன்னோர்களும் மூத்தோர்களும் சொல்லி வைத்ததையும் கல்விமான்களும் எழுத்தாளர்களும் ஏடுகளில் வடித்ததையும் அவற்றுக்கு செயல் வடிவம் கொடுத்து உயிர் கொடுக்க உறுதிபூணுங்கள். 2016 இன் மே தின உறுதிபூணல் மலையகத்தில் உயிருள்ளதாக அமையட்டும்.

(ஜே.ஜி.ஸ்டீபன் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54