ஐ.பி.எல். தொடரின் நேற்றைய லீக் போட்டியில் சுரேஷ் ரெய்னாவின் குஜராத் லயன்ஸ் அணி, தோனியின் புனே அணியை இறுதிப்பந்துவரை சென்று வெற்றிகொண்டது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டோனி தலைமையிலான புனே அணியின் ரஹானே மற்றும் திவாரி ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். ஒரு ஓட்டத்துடன் திவாரி ரன் அவுட் ஆக, ரஹானேவுடன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார்.
ஸ்மித் 29 பந்துகளில் அரைசதம் விளாச, 53 ஓட்டங்களுடன் ரஹானே ஆட்டமிழந்தார். அப்போது 13.4 ஓவர்களில் புனே அணி 124 ஓட்டங்களை எடுத்திருந்தது.
இதனையடுத்து ஸ்மித்துடன் அணித்தலைவர் தோனி இணைந்தார். இருவரும் குஜராத் அணியின் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தனர். தொடர்ந்து அதிரடி காட்டிய ஸ்மித் 53 பந்துகளில்
101 ஓட்டங்களைப் பெற்றுஆட்டமிழந்தார். இறுதியில் புனே அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களைக் குவித்தது. அணித் தலைவர் தோனி 30 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் அணி 196 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கியது.
அந்த அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய டிவைன் ஸ்மித் மற்றும் மெக்கலம் ஜோடி புனே அணி யின் பந்துவீச்சை துவம்சம் செய்துவிட்டனர். 8 ஓவர்களில் இந்த ஜோடி 93 ஓட்டங்களைப் பெற்று ஆடிக்கொண்டிருந்த வேளையில் மெக்கலம் 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்மித்தும் 63 ஓட்டங்களுடன் ஆட்ட மிழக்க, சுரேஷ் ரெய்னா மற்றும் கார்த் திக் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.
இந்த இருவரும் நிதானமாக ஆடி ஓட்டங்களைச் சேர்த்துக்கொண்டிருக்க 34 ஓட்டங்களுடன் ரெய்னாவும், 33 ஓட்டங்களுடன் கார்த்திக்கும் ஆட்டமிழந்தனர்.
இந்த இரு விக்கட்டுக்களும் விழ அணி சற்று தடுமாறியது. அதன்பிறகு பிரவீன் குமார் – பௌக்னர் ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றது. குஜராத் அணி வெற்றிபெறுவதற்கு கடைசி பந்தில் ஒரு ஓட்டம் தேவைப்பட்டது. அந்த ஒரு ஓட்டத்தை பௌக்னர் பெற்றுக்கொண்டார். இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற் றுக்கொண்ட குஜராத் அணி 3 விக்கெட்டுக்களால் புனேவை வீழ்த்தியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM