தற்கொலை குண்டு தாக்குதலில் பாதீக்கப்பட்ட நீர் கொழும்பு கட்டுவாப்பிட்டி ஆலய பங்கு மக்கள் மன்னார் இன்று வெள்ளிக்கிழமை(7) மாலை மன்னாரிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
அண்மையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி ஆலய பங்கு மக்கள் பல்வேறு துயரங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த மக்கள் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பாதிப்பை எதிர் கொண்ட நிலையில் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
குறித்த மக்கள் மனதளவில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து விடுபடும் நோக்கில் 'ஆற்றுப்படுத்தல்' பயணமொன்றை மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை (7) மாலை மன்னார் மறை மாவட்ட திருத்தளங்களை தரிசிக்க ,இரண்டு நாள் பயணத்தை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு மறைமாவட்ட விசுவாசத்தைப் பரப்பும் அமைப்பின் பொறுப்பாளர் அருட் தந்தை பிரசாத் கர்ஸண் அடிகளாரின் வழிநடத்துதலில் குறித்த அமைப்பினர் மன்னார் மறைமாவட்டத்தின் மடுத் திருத்தளம், மன்னார் புனித செபஸ்தியார் பேராலயம் , மன்னார் தோட்டவெளி மறை சாட்சிகளின் இராக்கினி ஆலயம், போன்ற யாஸ்திரீக தளங்களுக்குச் சென்று ,இறை வழிபாட்டில் ஈடுபட்டதுடன் அப்பகுதி பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்களிடமும் உரையாடல்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM